என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "நாகமலை புதுக்கோட்டை"
நாகமலை புதுக்கோட்டை:
நாகமலை புதுக்கோட்டை அருகே உள்ள வடபழஞ்சியைச் சேர்ந்தவர் செல்வ ராஜ். இவரது மனைவி வெங்கடேஸ்வரி (வயது 32). இவர் கோச்சடையில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.
இன்று காலை வீட்டில் இருந்து இரு சக்கர வாகனத்தில் பள்ளிக்கு புறப்பட்டார். அப்போது அந்த வழியாக வந்த மாரியம்மாள் என்பவர் லிப்ட் கேட்டு இரு சக்கர வாகனத்தில் ஏறிக்கொண்டார்.
வடபழஞ்சி விலக்கு அருகே மதுரை-தேனி மெயின் ரோட்டை வெங்கடேஸ்வரி கடக்க முயன்ற போது கம்பம் சென்ற அரசு பஸ் இரு சக்கர வாகனம் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட வெங்கடேஸ்வரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மாரியம்மாள் காயத்துடன் மீட்கப்பட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
விபத்து குறித்து நாகமலை புதுக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்லப் பாண்டியன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்