search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நல்ல மருது"

    • நல்ல மருது நினைவு தினத்தை முன்னிட்டு மருத்துவ முகாம் நடந்தது.
    • 2 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    மதுரை

    மதுரை மாநகர் மாவட்ட தி.மு.க. நிர்வாகி நல்ல மருதுவின் 3-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு வில்லாபுரம் மீனாட்சி நகர் பகுதியில்  அவரது திருஉருவப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது.

    இதில் மாநகர் மாவட்ட தி.மு.க. முன்னாள் பொறுப்புக்குழு உறுப்பினர் எஸ்ஸார் கோபி தலைமையில் பகுதி செயலாளர் ஈஸ்வரன், கவுன்சிலர் போஸ் முத் தையா, வட்டக் கழக செயலாளர் பாலா என்ற பால சுப்பிரமணியன் கவுன்சிலர் வழக்கறிஞர் குட்டி என்ற ராஜரத்தினம், நேதாஜி ஆறுமுகம் மற்றும் சுபாஷ் சந்திரபோஸ், சூரியவர்மன், கௌதம் போஸ், விஷ்ணுவர்தன் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தி னர்.

    இதனைத் தொடர்ந்து 200 பேர் ரத்ததானம் வழங்கினர். பின்னர் இப்பகுதியில் உள்ளவர்களுக்கு கண் பரிசோதனை சிறப்பு முகா மும் நடைபெற்றது. தொடர்ந்து 2000 பேருக்கு அன்னதானத்தை எஸ்ஸார் கோபி தொடங்கி வைத்தார்.நிகழ்ச்சியில் தி.மு.க. முன் னாள், இன்னாள் எம்.எல்.ஏ.க்கள், மாநகர், புற நகர், பகுதி, வட்ட, ஒன்றிய கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    ×