search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நண்பர்கள் கைது"

    • இளவரசன் கடந்த 6-ந்தேதி வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார்.
    • போலீசிடம் மாட்டிக் கொள்ளாமல் இருக்க அத்திப்பட்டு பாலாற்றிலேயே குழி தோண்டி இளவரசன் உடலை புதைத்து விட்டு வீட்டுக்கு சென்று விட்டனர்.

    காவேரிப்பாக்கம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் திருப்பாற்கடல் அருகே உள்ள அத்திப்பட்டு கிராமம், காமராஜர் தெருவை சேர்ந்தவர் இளவரசன் (வயது 27), டிரைவர். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

    இந்த நிலையில் இளவரசன் கடந்த 6-ந்தேதி வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.

    இதனால் அதிர்ச்சி அடைந்த இளவரசனின் தாய் செல்வி(55) காவேரிப்பாக்கம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் இளவரசனை பீர் பாட்டிலால் குத்தி கொலை செய்து உடலை பாலாற்றில் புதைத்ததாக, 4 பேர் வாலாஜா போலீசில் சரணடைந்தனர். அவர்களை கைது செய்தனர்.

    அத்திப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த இளவரசனும், லோகேஷ் என்கிற லாலு (27), பூவரசன் (24) , வாசுதேவன் (27), அருண்குமார் (33), ஆகியோர் நண்பர்கள்.

    கடந்த ஜனவரி மாதம் நடந்த மயிலாறு திருவிழாவின்போது இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இது தொடர்பாக இவர்களுக்கிடையே முன்விரோதம் இருந்து வந்தது.

    இந்த நிலையில் கடந்த 6-ந் தேதி இரவு லோகேஷ் மற்றும் அவரது நண்பர்களான பூவரசன், வாசுதேவன், அருண்குமார் ஆகியோர் ஒன்றாக அமர்ந்து மது அருந்தினர்.

    அப்போது அந்த வழியாக வந்த இளவரசனை, 4 பேரும் வழிமறித்து தகராறு செய்தனர்.

    இவர்களுக்குள் வாக்குவாதம் முற்றியதில், ஆத்திரமடைந்த லோகேஷ் மற்றும் அவரது நண்பர்கள் 3 பேரும் சேர்ந்து பீர் பாட்டிலால் இளவரசன் தலையில் அடித்தனர். உடைந்த பீர் பாட்டிலால் வயிறு மற்றும் பல இடங்களில் குத்தியும் கொலை செய்தனர்.

    மேலும் போலீசிடம் மாட்டிக் கொள்ளாமல் இருக்க அத்திப்பட்டு பாலாற்றிலேயே குழி தோண்டி இளவரசன் உடலை புதைத்து விட்டு வீட்டுக்கு சென்று விட்டனர்.

    காணாமல் போன இளவரசனை போலீசார் தேடுவதை அறிந்த அவர்கள் போலீசில் நிலையத்தில் சரண் அடைந்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்.

    முழுமையாக விசாரணை நடத்திய பிறகே கொலை செய்ததற்கான காரணம் தெரியும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ராணிப்பேட்டை போலீஸ் சூப்பிரண்டு கிரண் சுருதி மற்றும் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு விஸ்வேஸரய்யா ஆகியோர் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர்.

    பாலாற்றில் இளவரசன் உடல் புதைக்கப்பட்ட இடத்தை கண்டறிந்து வருவாய்த்துறை மற்றும் மருத்துவ குழு முன்னிலையில் பிணத்தை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

    மேலும் கிராமத்தில் அசம்பாவிதம் ஏதும் நடக்காமல் இருக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    • தீபாவளிக்கு மறுநாள் வழக்கம்போல் பணிக்கு சென்ற அவர்கள் 4 பேரும் மாலையில் ஆலைக்கு அருகிலேயே மது அருந்த சென்றனர்.
    • மதன்குமார், நாகேந்திரன், சரவணக்குமார் ஆகிய 3 பேரும் சேர்ந்து மதுபோதையில் சுந்தரை கல்லால் சரமாரியாக தாக்கினர்.

    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம் சிவகாசியை அடுத்த வெம்பக்கோட்டை அருகேயுள்ள வெற்றிலையூரணி அரசரடி தெருவைச் சேர்ந்தவர் சுந்தர் (வயது 35). இவர் அதே பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

    அதே ஆலையில் விஸ்வநத்தம் கிராமத்தை சேர்ந்த மதன்குமார், நாகேந்திரன், சரவணக்குமார் ஆகியோரும் வேலை பார்த்து வந்தனர். நண்பர்களான 4 பேரும் பெரும்பாலான நேரங்களில் பணி முடிந்ததும் ஒன்றாக அமர்ந்து மது அருந்துவதை வாடிக்கையாக கொண்டிருந்தனர்.

    தீபாவளிக்கு மறுநாள் வழக்கம்போல் பணிக்கு சென்ற அவர்கள் 4 பேரும் மாலையில் ஆலைக்கு அருகிலேயே மது அருந்த சென்றனர். அப்போது அவர்களுக்கிடையே தகராறு உருவானது. இதில் ஆத்திரம் அடைந்த மதன்குமார், நாகேந்திரன், சரவணக்குமார் ஆகிய 3 பேரும் சேர்ந்து மதுபோதையில் சுந்தரை கல்லால் சரமாரியாக தாக்கினர்.

    அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்ததும் மற்ற மூவரும் அங்கிருந்து தப்பிச்சென்றனர். பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த சுந்தரை மீட்டவர்கள் விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து கொலையுண்ட சுந்தரின் தாய் வெள்ளத்தாய் (70) கொடுத்த புகாரின் பேரில் வெம்பக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக மதன்குமார், சரவணக்குமாரை கைது செய்த போலீசார் தலைமறைவான நாகேந்திரனை தீவிரமாக தேடி வருகிறார்கள்.

    மது குடிப்பதில் ஏற்பட்ட தகராறில் தான் சுந்தர் கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதாவது காரணமா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    ×