search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொழில் தொடங்க மானியம்"

    • 90 சதவீதம் வங்கிகளால் பிணையமில்லாத கடன் வழங்கப்படும்
    • கலெக்டர் குமாரவேல்பாண்டியன் அறிவிப்பு

    வேலூர்:

    வேலூர் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மத்திய அரசின் 60 சதவீத நிதி பங்களிப்புடன் பிரதமரின் உணவு பதப்படுத்தும் குறுந்தொழில் நிறுவனங்கள் ஒழுங்குபடுத்தும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

    இந்த திட்டத்தின் கீழ் புதியதாக தொழில் தொடங்க ஆர்வமுள்ளோர், ஏற்கனவே உணவுப்பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ளோர் மற்றும் குறு நிறுவனங்கள், சுய உதவி குழுவினர், உழவர் உற்பத்தியாளர் அமைப்பினர், உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் ஆகியோர் பயன்பெறலாம்.

    ரூ.1 கோடி வரையிலான திட்டத் தொகை கொண்ட உணவு பதப்படுத்தும் தொழில் திட்டங்கள் இத்திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற தகுதி பெற்றவை. இந்த திட்ட தொகையில் 10 சதவீத முதலீட்டாளர் அவர்களின் பங்காக செலுத்த வேண்டும். 90 சதவீதம் வங்கிகளால் பிணையமில்லாத கடன் வழங்கப்படும்.

    அரசு 35 சதவீதம் மானியம், அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரைக வழங்கும். சுயஉதவிக்குழுவினர் உணவு பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டால் அவர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.40 ஆயிரம் வீதம் தொடக்க நிலை மூலதனமாக வழங்கப்படும்.

    உணவுப்பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கு தேவையான பொது கட்டமைப்பு வசதிகள் மற்றும் பொது வசதியாக்க மையங்களை ஏற்படுத்தவும் திட்டத்தொகையில் 35 சதவீத மானியத்துடன் கடனுதவி வழங்கப்படும்.

    இத்திட்டத்தின் கீழ் பயன்பெற pmfme.mofpi.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தினை பதிவு செய்ய வேண்டும். ஆர்வமுள்ள தொழில் முனைவோர், தொழில் நிறுவனங்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம்.

    கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட தொழில்மையத்தை அணுகலாம் என கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தெரிவித்துள்ளார்.

    • தொழில் தொடங்க ஒரு அற்புதமான திட்டம் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன வளர்ச்சித் திட்டம் ஆகும்.
    • 61 நபர்களுக்கு ரூ.8.40 கோடி திட்ட மதிப்பீட்டில் நடத்தப்பட்டு வருகின்ற தொழில்களுக்கு ரூ.2.10 கோடி மானியத் தொகை வழங்கப்பட்டுள்ளது.

    கோவை:

    சுயமாக தொழில் தொடங்க ஒரு அற்புதமான திட்டம் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன வளர்ச்சித் திட்டம் ஆகும்.

    இத்திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சம் முதல் ரூ.5 கோடி திட்ட மதிப்பீட்டில் தொழில் தொடங்க இணையதளத்தில் விண்ணப்பிக்க பட்டியலினத்தவர்கள், பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரர்களுக்கு 10 சதவித்த மானியம் கூடுதலாக வழங்கப்படும்.

    வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின்கீழ் ரூ.5 லட்சம் வரை திட்ட மதிப்பீட்டில் வியாபார தொழில்களுக்கு விண்ணப்பிக்கலாம். கோவை மாவட்டத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு முதலீட்டு மானியமாக 344 நிறுவனங்களுக்கு ரூ.32.30 கோடி என மொத்தம் 399 நிறுவனங்களுக்கு ரூ.37.31 கோடி மானியமாக வழங்கப்பட்டுள்ளது.

    பாரத பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் இதுவரை 94 நபர்களுக்கு ரூ.2.73 கோடி மானியமாக வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு 61 நபர்களுக்கு ரூ.8.40 கோடி திட்ட மதிப்பீட்டில் நடத்தப்பட்டு வருகின்ற தொழில்களுக்கு ரூ.2.10 கோடி மானியத் தொகை வழங்கப்பட்டுள்ளது.

    படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் இதுவரையில் 2021-2022-ம் ஆண்டுகளில் 325 நபர்களுக்கு ரூ.1.85 கோடி மானியமாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டதில் இதுவரை 126 நபர்களுக்கு ரூ.5.80 கோடி திட்ட மதிப்பீட்டில், நடத்தப்பட்டு வருகின்ற தொழில்களுக்கு ரூ.1.45 கோடி மானியத் தொகை வழங்கப்பட்டுள்ளது. தொழில் தொடங்க 229 நபர்களுக்கு ரூ.43.93 கோடி கடனுதவிக்கு ரூ.10.96 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது.

    இந்த தகவலை கலெக்டர் சமீரன் தெரிவித்துள்ளார். மானியம் பெற்றவர்கள் முதல்-அமைச்சருக்கு நன்றிகளை தெரிவித்தனர்.

    ×