search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேலூர் மாவட்டத்தில் உணவு பதப்படுத்தும் தொழில் தொடங்க மானிய கடன்
    X

    வேலூர் மாவட்டத்தில் உணவு பதப்படுத்தும் தொழில் தொடங்க மானிய கடன்

    • 90 சதவீதம் வங்கிகளால் பிணையமில்லாத கடன் வழங்கப்படும்
    • கலெக்டர் குமாரவேல்பாண்டியன் அறிவிப்பு

    வேலூர்:

    வேலூர் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மத்திய அரசின் 60 சதவீத நிதி பங்களிப்புடன் பிரதமரின் உணவு பதப்படுத்தும் குறுந்தொழில் நிறுவனங்கள் ஒழுங்குபடுத்தும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

    இந்த திட்டத்தின் கீழ் புதியதாக தொழில் தொடங்க ஆர்வமுள்ளோர், ஏற்கனவே உணவுப்பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ளோர் மற்றும் குறு நிறுவனங்கள், சுய உதவி குழுவினர், உழவர் உற்பத்தியாளர் அமைப்பினர், உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் ஆகியோர் பயன்பெறலாம்.

    ரூ.1 கோடி வரையிலான திட்டத் தொகை கொண்ட உணவு பதப்படுத்தும் தொழில் திட்டங்கள் இத்திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற தகுதி பெற்றவை. இந்த திட்ட தொகையில் 10 சதவீத முதலீட்டாளர் அவர்களின் பங்காக செலுத்த வேண்டும். 90 சதவீதம் வங்கிகளால் பிணையமில்லாத கடன் வழங்கப்படும்.

    அரசு 35 சதவீதம் மானியம், அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரைக வழங்கும். சுயஉதவிக்குழுவினர் உணவு பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டால் அவர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.40 ஆயிரம் வீதம் தொடக்க நிலை மூலதனமாக வழங்கப்படும்.

    உணவுப்பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கு தேவையான பொது கட்டமைப்பு வசதிகள் மற்றும் பொது வசதியாக்க மையங்களை ஏற்படுத்தவும் திட்டத்தொகையில் 35 சதவீத மானியத்துடன் கடனுதவி வழங்கப்படும்.

    இத்திட்டத்தின் கீழ் பயன்பெற pmfme.mofpi.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தினை பதிவு செய்ய வேண்டும். ஆர்வமுள்ள தொழில் முனைவோர், தொழில் நிறுவனங்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம்.

    கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட தொழில்மையத்தை அணுகலாம் என கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×