search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேசப்பற்று"

    • 27 அடி நீளமும் 11 அடி அகலத்தில் பிரமாண்டமான தேசிய கொடியை கோலம் வரைந்துள்ளார்.
    • தேசியக்கொடி கோலத்தை வரைவதற்கு சுமார் 6 மணி நேரம் தேவைப்பட்டது.

    சீர்காழி:

    குடியரசு தின விழாவை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ரயில்வே ரோடு தெருவை சார்ந்த கயல்விழிவினோதினி என்ற பெண் தனது வீட்டில் 27அடி நீளமும் 11 அடி அகலத்திலும் மிகப்பிரமாண்டமான தேசிய கொடியை கலர் கோல மாவுகளை பயன்படுத்தி வரைந்து உள்ளார்.

    இவர் ஒவ்வொரு அரசு சார்பில் நடைபெறும் விழாக்களிலும் அதற்குரிய கோலத்தை இட்டு அசத்தி வருகிறார்.

    கடந்த தைப்பொங்கல் திருநாளில் அசல் பட்டுப்புடவை போன்று வண்ண கோலம் இட்டு பார்ப்பவர்கள் அனைவரையும் வியக்க வைத்தார்.

    இந்த தேசியக்கொடி கோலத்தை வரைவதற்கு சுமார் 6 மணி நேரம் தேவைப்பட்டது.

    இந்த தேசிய கொடியை மிகுந்த தேசப்பற்றுடன் கோல மாவுகளை பயன்படுத்தி வரைந்ததாக கயல்விழி வினோதினி பெருமிதத்துடன் தெரிவித்தார்.

    இந்த கோலத்தை நேற்று அனைவரும் சென்று பார்த்து ரசித்து விட்டு சென்றனர்.

    ×