search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு"

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகின்ற 27-ந் தேதி அன்று நடைபெறவுள்ளது. கிழக்கு தொகுதியில் மொத்தம் 238 வாக்குச்சாவடிகள் உள்ளன.

    வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்துவதற்காக 1408 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

    மேலும், வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவிற்கு பயன்படுத்தப்படவுள்ள வாக்குப்பதிவு எந்திர ங்கள் அனைத்து அங்கீக ரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிகள் முன்னிலையில் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவிற்காக 467 கட்டுப்பாட்டு எந்திரங்களில் 286 கட்டுப்பாட்டு எந்திரங்களும்,

    474 வாக்குப்பதிவு எந்திரங்களில் 286 வாக்குப்பதிவு எந்திர ங்களும், 467 வாக்காளர் தங்கள் அளித்த வாக்கினை சரிபார்க்கும் எந்திரங்களில் 310 எந்திரங்களும் என மொத்தம் 882 வாக்குப்பதிவு எந்திரங்களும் 30 சதவீதம் கூடுதல் ஒதுக்கீடாகவும் கணினி சுழற்சி முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    அதன்படி ஈரோடு ஆர்.டி.ஓ. அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திர வைப்பறையில் வைக்கப்பட்டுள்ள கணினி வழியில் சுழற்சி முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்களை அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில்

    ஈரோடு ஆர்.டி.ஓ. சதிஷ்குமார் ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர், ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் சிவகுமாரிடம் வழங்கினார்.

    இந்த வாக்குப்பதிவு எந்திரங்கள் மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைப்பறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு ள்ளது. 24 மணி நேரமும் துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

    ×