search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திட்டமிடல்"

    • பாதுகாப்பான ஆடைகளை தேர்ந்தெடுத்து அணிய வேண்டும்.
    • ஒரு மாற்று பயணத்திட்டத்தை வைத்துக்கொள்வது நல்லது.

    பயணங்கள் நம்முடைய வாழ்வில் தவிர்க்க முடியாதவை. நீங்கள் மேற்கொள்ளும் பயணம், சூழ்நிலை, நேரம், காலம் போன்ற பல்வேறு காரணிகளால் சற்று கடினமானதாக மாறலாம். ஒவ்வொரு பருவகாலத்தில் பயணம் செய்யும்போதும் அதற்கு ஏற்ற முன்னேற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான் அந்த பயணம் இடையூறுகள் இன்றி வெற்றிகரமாக அமையும். அந்த வகையில் குளிர் காலங்களில் பயணம் மேற்கொள்ளும்போது கடைப்பிடிக்க வேண்டிய சில பயனுள்ள குறிப்புகள்.

    குளிர்காலத்தில் பயணம் செய்யும்போது கதகதப்பை தரக்கூடிய பாதுகாப்பான ஆடைகளை தேர்ந்தெடுத்து அணிய வேண்டும். மாற்று உடை ஒன்றை உடன் கொண்டு செல்வது எப்போதும் பயன் தரும் பழக்கமாகும். பருத்தி துணியால் தயாரிக்கப்பட்ட ஆடைகள் ஈரப்பதத்தை உறிஞ்சி மேலும் குளிரை உண்டாக்கும். எனவே கம்பனி மற்றும் தோல் ஆடைகள் குளிர்கால பயணத்தின்போது அணிவதற்கு ஏற்றவையாகும்.

    குளிர்கால பயணத்தில், வழுக்கும் வகையிலான காலணிகள், ஹீல்ஸ் அணிவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். உடலின் வெப்பத்தை அதிகரிக்கக் கூடிய காலணிகளை அணிவது நல்லது.

    பயணத்தின்போது குளிர்ந்த நீரை பருகுவதை தவிர்க்க வேண்டும். வெந்நீர் நிரம்பிய பிளாஸ்க்கை உடன் எடுத்துச்செல்வது பலவிதங்களில் உங்களுக்கு பயன்படும்.

    தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் வடகிழக்கு பருவமழை காலத்தில்தான் அதிக மழை பொழியும். இந்த காலத்தில் குளிரும் அதிகமாக இருக்கும்.

    அடிக்கடி மழைப்பொழிவை எதிர்கொள்ளும். இந்த சமயங்களில் நீங்கள் பயணம் மேற்கொண்டால் குடை, ரெயின்கோட் போன்றவற்றை உடன் எடுத்துச்செல்வது அவசியமானதாகும். பயண காலத்தில் எப்போதும் புதிதாக தயாரித்த, சூடான உணவுகளையே சாப்பிடுங்கள். இது உங்கள் உடல் வெப்பத்தை சமநிலைப்படுத்தும்.

    குளிர்காலங்களில் பயணம் செய்யும்போது குழந்தைகள் மற்றும் முதியவர்களை உடன் அழைத்துச் செல்வதை தவிர்க்க வேண்டும். கட்டாயம் அழைத்து செல்லவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால், அனைத்து விதமான பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.

    மருந்துகள், பால் பவுடர் உணவுப்பொருட்கள் ஆகியவற்றை போதுமான அளவு கொண்டு செல்ல வேண்டும். குளிர்கால பயணத்தின் போது உங்கள் உடமைகளை கொண்டு செல்ல துணியால் தயாரிக்கப்பட்ட பையை பயன்படுத்தாமல், பாதுகாப்பான பெட்டிகளை உபயோகிப்பது சிறந்தது.

    குளிரில் இருந்து சருமத்தை பாதுகாக்கவும், உதடுகளில் வெடிப்பு ஏற்படுவதைத் தடுக்கவும். மாய்ஸ்சரைசர், லிப் பாம் ஆகியவற்றை பயணத்தின்போது பயன்படுத்த வேண்டும். குளிர், மழை, பனி இவையெல்லாம் நீங்கள் முன்கூட்டியே போட்டுவைத்த பயண திட்டத்தில் மாற்றத்தை ஏற்படுத்தலாம். எனவே. எப்போதும் ஒரு மாற்று பயணத்திட்டத்தை வைத்துக்கொள்வது நல்லது.

    • உடல் ஆரோக்கியம் மட்டுமின்றி அலங்காரத்திலும் கவனம்.
    • முன்கூட்டியே திட்டமிட வேண்டும்.

    காலையில் எழுந்தது முதலே வீட்டு வேலைகளை வேகமாக முடிப்பதற்கு சுழலும் குடும்ப தலைவிகள் தங்கள் உடல் நலனிலும் அக்கறை காட்டுவது அவசியம். அப்போதுதான் சோர்வின்றி எந்த வேலையையும் மேற்கொள்ள முடியும். வீட்டு வேலைகளை முடித்துவிட்டு அலுவலகம் செல்லும் பெண்களாக இருந்தால் உடல் நலனுடன் மற்றொரு கவலையும் எட்டிப்பார்க்கும். தங்களால் நேர்த்தியாக அலங்காரம் செய்ய முடியவில்லையே என்று ஆதங்கப்படுவார்கள். அதற்கு இடம் கொடுக்காமல் உடல் ஆரோக்கியம் மட்டுமின்றி அலங்காரத்திலும் கவனம் செலுத்துவதற்கு செய்ய வேண்டிய திட்டமிடல்கள் குறித்து பார்ப்போம்.

    இரவிலே தயாராகுங்கள்:

    காலையில் எழுந்ததுமே சமையல் வேலை, குழந்தைகளை பள்ளிக்கூடம் அனுப்புவது, கணவருக்கும், குழந்தைகளுக்குமான மதிய உணவு தயார் செய்வது என கவனம் முழுவதும் வேலையின் மீதுதான் பதிந்திருக்கும். அதுவே மன நெருக்கடிக்கும் உள்ளாக்கும்.

    அதிலும் வேலைக்கு செல்லும் குடும்பத் தலைவியாக இருந்தால் அவசர கதியில் புறப்பட வேண்டியிருக்கும். அதனால் கவன சிதறல்கள் ஏற்படும். ஒருசில வேலைகளை செய்து முடிக்க முடியாமல் போகலாம். அவசரத்தில் தவறு நடக்கலாம்.

    அதனால் முன்கூட்டியே திட்டமிட வேண்டும். முந்தைய தினம் இரவே `நாளை என்ன சமையல் செய்ய வேண்டும், என்ன உடை உடுத்த வேண்டும், அதற்கு ஏற்ற அலங்கார பொருட்கள் என்னென்ன? என்பதை தேர்வு செய்து வைத்துவிட வேண்டும். இதற்கு அதிகபட்சமாக 15 நிமிடங்கள்தான் செலவாகும். மறுநாள் காலையில் வேலைகளை சுலபமாக முடித்துவிட்டு நீங்களும் பணிக்கு செல்ல தயாராகிவிடலாம். காலை நேர பரபரப்பையும், தேவையில்லாத டென்ஷனையும் தவிர்த்துவிடலாம். சருமமும் சோர்வுக்கு ஆளாகாது. அலங்காரத்திற்கும் போதுமான நேரம் செலவிட்டு விடலாம்.

    ஜடை பின்னல்:

    இரவில் தூங்க செல்லும்போது இறுக்கமாக ஜடை பின்னுவதை தவிர்க்க வேண்டும். கூந்தல் முடி தளர்வாக இருக்கும்படி பின்னுவதுதான் சரியானது. காலையில் எழுந்திருக்கும்போது சிக்குமுடி பிரச்சினை ஏற்படுவதை தவிர்க்கும். சிரமமின்றி எளிமையாக கூந்தல் அலங்காரம் செய்து கொள்வதற்கும் வழிவகை செய்யும். சிகை அலங்காரம் செய்வதற்கு போதுமான நேரம் இல்லாவிட்டால் சிறிதளவு லோஷனை கூந்தலில் தடவலாம். அப்படி செய்தால் அலங்காரத்திற்கு அதிகம் சிரமப்பட வேண்டியிருக்காது.

    ஐ லைனர்:

    தூக்கமின்மை பிரச்சினையை எதிர்கொள்பவர்களின் கண்களைச் சுற்றி கருவளையங்கள் காணப்படும். ஐ லைனர் உபயோகித்து இதை அழித்து விடலாம். வீட்டில் அலங்காரம் செய்வதற்கு நேரம் இல்லையெனில் கைப்பையில் அலங்கார பொருட்களை வைத்துக்கொள்ளலாம். அலுவலகம் செல்லும் வழியிலோ, அலுவலகம் சென்ற பிறகோ எளிமையான ஒப்பனையை செய்துவிடலாம். அதற்கான சூழல் இல்லாதபட்சத்தில் பளிச்சிடும் நிறம் கொண்ட லிப்ஸ்டிக் பயன்படுத்தலாம். அது அலங்காரம் இல்லாமலே உங்களை அழகாக காண்பிக்கும்.

    இரவு நேர குளியல்:

    இரவில் சாப்பிட்டுவிட்டு சமையல் அறை வேலைகளை எல்லாம் முடித்த பிறகு வெதுவெதுப்பான நீரில் குளிக்கலாம். இந்த குளியல் தூக்கம் கண்களை தவழ வைக்கும். மறுநாள் உற்சாகத்துடன் இயங்க உதவி புரியும்.

    ×