search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தாரை வாத்து"

    • மதுரைக்கு பவளக்கனிவாய் பெருமாள்-சுப்பிரமணியசுவாமி இன்று புறப்பாடாகிறார்கள்.
    • மீனாட்சி அம்மனை சுந்தரேசுவரருக்கு தாரை வார்த்து கொடுப்ப தற்காக பவளக்கனிவாய் பெருமாளும் உடன் செல்கிறார்.

    திருப்பரங்குன்றம்

    மதுரை சித்திரை திருவிழாவையொட்டி நாளை (2-ந் தேதி) மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நடக்கிறது. பெற்றோர் திருமணத்தில் பங்கேற்பதற்காக திருப்பரங்குன்றத்தில் இருந்து சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் இன்று மாலை 5 மணிய ளவில் மதுரைக்கு புறப்பாடாகிறார்கள்.

    அவர்களுடன் மீனாட்சி அம்மனை சுந்தரேசுவரருக்கு தாரை வார்த்து கொடுப்ப தற்காக பவளக்கனிவாய் பெருமாளும் உடன் செல்கிறார்.

    மதுரை செல்லும் சுப்பிரமணிய சுவாமி வருகிற 4-ந் தேதி வரை ஆவணி மூல வீதிகளில் தெய்வானையுடன் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

    5-ந் தேதி மாலை பூப்பல்லக்கில் எழுந்தருளி சுப்பிரமணிய சுவாமி, தெய்வானையுடன் திருப்பரங்குன்றம் வந்தடைவார். அவருடன் பூ பல்லக்கில் பவளக்கனிவாய் பெருமாளும் திருப்பரங்குன்றம் கோவிலுக்கு வந்தடைவார்.

    இதற்கான ஏற்பாடுகளை திருப்பரங்குன்றம் கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.

    ×