search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தாய்ப்பால் வங்கி"

    • குழந்தைக்கான முதல் உணவு, தாய்ப்பால்.
    • உடலுறுப்புகள் சரியான முறையில் வளர்ச்சியடைய தாய்ப்பால் மிக அவசியம்.

    குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்துக்குள் முதல் உணவாக தாய்ப்பாலைத்தர உதவ வேண்டும். இல்லையெனில் ஏன் அவ்வாறு தாய்ப்பால் கொடுக்க இயலவில்லை என்ற மருத்துவ காரணத்தை மருத்துவ பதிவேட்டிலும், தாய் மருத்துவமனையை விட்டு வெளியேறும் போது தரும் ஆவணத்திலும் பதிவுசெய்ய வேண்டும்.

    குழந்தை பிறந்த நேரம், தாய்ப்பால் கொடுத்த நேரம் இரண்டையும் பதிவுசெய்ய வேண்டும். இதை ஒவ்வொரு மருத்துவமனையிலும் கடைப்பிடித்தால் குழந்தை இறப்பு விகிதத்தை வெகுவாகக் குறைக்க முடியும் என்கிறது, மருத்துவ ஆய்வு.

    வேலைக்குப் போகும் பெண்களின் சிரமத்தைக் குறைப்பதற்காக அரசாங்கம் பேறுகால விடுமுறை வழங்குகிறது. ஆனாலும் 46.8 சதவீதம் தாய்மார்கள் தான், குழந்தைகளுக்கு 6 மாதம் முடிய தாய்ப்பால் மட்டுமே தருகிறார்கள். தாய்ப்பால் பெறுவது குழந்தையின் உரிமை. அதைத் தருவது தாயின் கடமை.

    வேலைக்குச் செல்லும் பெண்கள், தங்கள் குழந்தைக்கு தொடர்ந்து தாய்ப்பால் தருவது பற்றி முன்கூட்டியே திட்டமிட வேண்டும்.

    வேலையில் சேர 3 வாரத்துக்கு முன்பிருந்தே இதை ஆரம்பிக்கலாம். முதல் வாரத்தில் தாய்ப்பாலை எப்படி எடுப்பது, பாதுகாப்பது என்று கற்றுக்கொள்ள வேண்டும். இப்படி சேகரிக்கப்பட்ட பால், அறை வெப்பநிலையில் 7 மணி நேரம் வரை கெடாமல் இருக்கும்.

    குளிர்சாதனப் பெட்டியில் 24 மணி நேரம் வரை கெடாது. சேகரித்து வைத்த பாலை ஸ்பூன் மூலம் குழந்தைக்குப் புகட்ட வேண்டும்.

    குழந்தைக்கான முதல் உணவு, தாய்ப்பால். குழந்தையின் உடலுறுப்புகள் சரியான முறையில் வளர்ச்சியடைய, புரதச்சத்து நிறைந்த தாய்ப்பால் மிக அவசியம். சுகப்பிரசவம் என்றால் குழந்தை பிறந்த அரைமணி நேரத்திற்குள்ளும், அறுவை சிகிச்சை மூலமாகப் பிறந்த குழந்தை என்றால் இரண்டு மணி நேரத்திலும் தாய்ப்பால் கொடுக்கப்பட வேண்டும்.

    குறைந்தபட்சம் மூன்று மணி நேரத்துக்கு ஒருமுறை குழந்தைக்கு தாய்ப்பால் புகட்டுவது அவசியம். உலக சுகாதார நிறுவனம் மற்றும் ஐ.நா சபையின் குழந்தைகள் நல கூட்டமைப்பின் ஆய்வு முடிவுகளின்படி, தாயின் பால்சுரப்பினைப் பொருத்து குழந்தைக்கு 3 வயது வரையில் தாய்ப்பால் கொடுக்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

     சீம்பால் தொடங்கி 3 வயது வரையில் தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகள், நோய்க்கிருமிகளிடம் இருந்து சிறப்பான பாதுகாப்பு கிடைக்கப்பெறுவார்கள்.

    முதல் ஆறு மாதத்துக்கு குழந்தைக்கு தாய்ப்பால் மட்டுமே உணவு, தண்ணீர்கூட கொடுக்கத் தேவையில்லை. அதன் பிறகு திட உணவுகளைக் கொடுக்க ஆரம்பிக்கலாம்.

    பிறந்த குழந்தைக்கு, பசுவின் பாலோ பவுடர் பாலோ தாய்ப்பாலுக்கு இணையான சத்தைக் கொடுக்கக்கூடியது அல்ல என்பதுடன், அளவு, இடைவெளி என கொடுக்கப்படும் முறைகளால் அது சிசுவுக்கு பாதிப்புகளையும் ஏற்படுத்தலாம். தாய்ப்பால் மட்டுமே குழந்தைக்கு எளிதில் ஜீரணமாகும் இயற்கை உணவு.

    குழந்தையின் புத்திக்கூர்மை, மூளைச் செயல்திறன், சுறுசுறுப்பு ஆகியவற்றை நிர்ணயிக்கும் கருவியாக தாய்ப்பால் செயல்படுவதாக உலக சுகாதார நிறுவனமான WHO உரக்கச் சொல்கிறது. மேலும், தாய்ப்பால் அருந்தும் குழந்தைகளுக்கு உடல் எடை அதிகரித்தல், மனஅழுத்தம், சர்க்கரை நோய் போன்ற பாதிப்புகளுக்கான வாய்ப்புகள் மிகமிகக் குறைவு என்கிறார்கள் மருத்துவர்கள்.

    ×