search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தாயை கோடாரியால் வெட்டி கொன்ற மகன் கைது"

    • குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால் அடிக்கடி பணம் கேட்டு தனது தாயிடம் தகராறு செய்து வந்தார்.
    • கோடாரியை எடுத்து எனக்கு பணம் தராத நீ உயிருடன் இருக்க வேண்டாம் எனக்கூறி சரமாரியாக வெட்டினார்.

    தேவதானப்பட்டி:

    தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே மஞ்சளாறு அணை காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன். கூலித்தொழிலாளி. இவரது மனைவி ஜோதிலட்சுமி. மகன்கள் விருமாண்டி, மருதுபாண்டி, சிவபாண்டி.

    இதில் 2-வது மகனான மருதுபாண்டி வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்துள்ளார். மேலும் குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால் அடிக்கடி பணம் கேட்டு தனது தாயிடம் தகராறு செய்து வந்தார். நேற்று காலை மருதுபாண்டி குடிபோதையில் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது ஜோதிலட்சுமி மதுகுடிக்காமல் வேலைக்கு செல்லுமாறு அறிவுரை வழங்கியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மருதுபாண்டி தனது தாயிடம் மேலும் பணம் கேட்டுள்ளார்.

    அதற்கு அவர் தர மறுத்ததுடன் குடிபோதையில் வந்ததையும் கண்டித்துள்ளார். அருகில் இருந்த கோடாரியை எடுத்து எனக்கு பணம் தராத நீ உயிருடன் இருக்க வேண்டாம் எனக்கூறி சரமாரியாக வெட்டினார். இதில் பலத்த காயமடைந்த ஜோதிலட்சுமியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஒன்றுதிரண்டு அவரை மீட்டு தேனி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தேவதானப்பட்டி போலீசில் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மருதுபாண்டியை கைது செய்தனர்.

    ×