என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » தம்பதி காயம்
நீங்கள் தேடியது "தம்பதி காயம்"
- மணி தனது மனைவி மற்றும் மகனுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
- திருஷ்டிக்காக சாலையின் நடுவே பூசணிக்காய் உடைக்கப்பட்டு கிடந்ததால் விபத்து நேரிட்டது.
புதுக்கோட்டை
புதுக்கோட்டை அருகே பொற்பனைக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் மணி (வயது 45). இவர் தனது மனைவி மற்றும் மகனுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது கீழ 4-ம் வீதியில் சாலையில் உடைக்கப்பட்டு கிடந்த பூசணிக்காயின் மீது மோட்டார் சைக்கிள் ஏறியதில் நிலைக்குலைந்து விபத்துக்குள்ளானது. இதில் மோட்டார் சைக்கிளில் சென்ற மணி மற்றும் அவரது மனைவி ஆகியோர் கீழே விழுந்ததில் லேசான காயமடைந்தனர். காயமடைந்த தம்பதி மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்றபின் வீடு திரும்பினர்.
திருஷ்டிக்காக சாலையின் நடுவே பூசணிக்காய் உடைக்கப்பட்டு கிடந்ததால் விபத்து நேரிட்டது தெரியவந்தது.
விபத்து ஏற்படும் வகையில் சாலையின் நடுவே பூசணிக்காய் உடைக்கப்படுவதை தவிர்க்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X