search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தனியார் வாகனம்"

    • தனியார் வாகனங்கள் சில அனுமதி இன்றி பள்ளி குழந்தைகளை அதிக எண்ணிக்கையில் ஏற்றிச் செல்கின்றனர்.
    • இதனால் பெரிய விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் சங்ககிரி போக்குவரத்து துறை அலுவலர்களுக்கு புகார் தெரிவிக்கப்பட்டது.

    எடப்பாடி:

    எடப்பாடி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் தனியார் வாகனங்கள் சில அனுமதி இன்றி பள்ளி குழந்தைகளை அதிக எண்ணிக்கையில் ஏற்றிச் செல்வதாகவும், இதனால் பெரிய விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் சங்ககிரி போக்குவரத்து துறை அலுவலர்களுக்கு புகார் தெரிவிக்கப்பட்டது.

    திடீர் ஆய்வு

    இதையடுத்து எடப்பாடி, கொங்கணாபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் போக்குவரத்து துறை அலுவலர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். வட்டார போக்குவரத்து அலுவலர் சுப்பிரமணியம் மற்றும் போக்குவரத்து ஆய்வா ளர்கள் செந்தில்குமார், புஷ்பா ஆகியோர் தலைமையில் தனித்தனி குழுக்க ளாக பல்வேறு இடங்க ளில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

    இதன் ஒரு பகுதியாக ஜலகண்டாபுரம்- சின்னப்பம்பட்டி பிரதான சாலையில் நேற்று மாலை போக்குவரத்து அலுவலர்கள் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது ஒரு தனியார் வேன் ஒன்று உரிய அனுமதி இன்றி அப்பகுதியில் உள்ள பள்ளி குழந்தைகளை அதிக அளவில் ஏற்றி வந்ததை கண்டறிந்த போக்குவரத்து துறையினர் வாகனத்தை மடக்கி பிடித்தனர். தொடர்ந்து வாகன உரிமையாளர் மற்றும் சம்பந்தப்பட்ட வாகன டிரைவரிடம் ஆய்வாளர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    மேலும் அப்பகுதியில் இது போன்று உரிய அனுமதி இன்றி தனியார் வாகனங்கள் பள்ளி மாணவர்களை ஏற்றிச் செல்வது கண்டறி யப்பட்டால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்கு வரத்து துறை அலுவலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    ×