search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தனியார் நிறுவன ஊழியர் கைது"

    • கருத்து வேறுபாடு காரணமாக சகுந்தலா பிரிந்து வந்து அவருடைய அண்ணன் இளம்பருதி வீட்டில் வாழ்ந்து வந்தார்.
    • இளம்பரிதியை செல்போனில் தொடர்பு கொண்டு தகாத வார்த்தையில் திட்டியு ள்ளார்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், பெரும்பாலை அருகே உள்ள வத்தல்பட்டி பகுதியை சேர்ந்தவர் இளம்பரிதி (வயது 32). இவருடைய தங்கை சகுந்தலா.

    இந்த நிலையில் சகுந்த லாவுக்கு அச்சம்பட்டியை சேர்ந்த கருப்பண்ணன் என்பவருக்கும் இளம்பரிதி திருமணம் செய்து வைத்தார்.

    கடந்த சில மாதங்களாக கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சகுந்தலா பிரிந்து வந்து அவருடைய அண்ணன் இளம்பருதி வீட்டில் வாழ்ந்து வந்தார்.

    இதைத்தொடர்ந்து சகுந்தலா சேலம் அருகே உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தபோது வெள்ளம்மன்காடு பகுதியை சேர்ந்த சேட்டு என்பவருடன் பழக்கம் ஏற்பபட்டது. இது குறித்து தகவல் இளம்பருதிக்கு தெரியவந்தது. இதனால் சகுந்தலாவை அவர் கண்டித்தார்.

    சகுந்தலாவை கண்டித்த சம்பவம் சேட்டுக்கு தெரியவந்ததால், அவர் இளம்பரிதியை செல்போனில் தொடர்பு கொண்டு தகாத வார்த்தையில் திட்டியு ள்ளார்.

    இதுகுறித்து இளம்பருதி பெரும்பாலை போலீஸ் ஸ்ேடசனில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சேட்டுவை கைது செய்தனர்.

    ×