search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "த யாத்திரை"

    • காளிமலைக்கு சமுத்திரகிரி ரத யாத்திரையை தொடங்கி வைக்கிறார்
    • சன்னதி தெருவில் இந்த சமுத்திரகிரி ரத யாத்திரை தொடக்க விழா நடக்கிறது.

    கன்னியாகுமரி, அக்.18-

    குமரி மாவட்ட எல்லையான பத்துகாணி பகுதியில் உள்ள காளிமலை யில் பத்ரகாளி அம்மன் கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் துர்க்கா ஷ்டமி திருவிழா நாளை தொடங்கி 6 நாட்கள் நடக்கிறது இதையொட்டி கன்னியா குமரியில் இருந்து காளிமலைக்கு சமுத்திரகிரி ரத யாத்திரை நாளை காலை தொடங்குகிறது. முன்னதாக கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் காலை 6 மணிக்கு இருமுடி கட்டு மற்றும்புனிதநீர்குடங் களில்நிரப்பும் நிகழ்ச்சி நடக்கிறது. அதன்பிறகு கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் கலையரங்கம் முன்பு உள்ள சன்னதி தெருவில் இந்த சமுத்திரகிரி ரத யாத்திரை தொடக்க விழா நடக்கிறது.

    விழாவுக்கு முன்னாள் மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் தலைமை தாங்ககுகிறார். இந்த நிகழ்ச்சியில் மத்திய வெளி யுறவு மற்றும் பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி முரளிதரன், மதுரை ஆதீனம் 293-வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர தேசிய ஞான சம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் சமுத்திரகிரி ரதயாத்திரையை கொடி அசைத்து தொடங்கி வைக்கிறார்கள்.

    கன்னியாகுமரியில் இருந்து புறப்படும் இந்த சமுத்ரகிரி ரத யாத்திரை விவேகானந்தபுரம், கொட்டாரம், சுசீந்திரம், நாகர்கோவில், தக்கலை, குலசேகரம் வழியாக 22-ந்தேதி பத்துகாணி பகுதியில் உள்ள காளிமலையை சென்று அடைகிறது.

    ×