search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டிரைவர் விஷம் குடித்து தற்கொலை"

    • மனைவி செலவுக்கு பணம் தராததால் விபரீத முடிவை எடுத்தார்.
    • வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார்.

    கோவை:

    கோவை தடாகம் அடுத்த பன்னிமடை அறிவு நகரை சேர்ந்தவர் துரைராஜ் (வயது 42). இவர் கோவை அரசு ஆஸ்பத்திரியில் ஒப்பந்த அடிப்படையில் டிரைவராக வேலை செய்து வந்தார்.

    இந்தநிலையில் இவருக்கு குடிப்பழக்கம் உள்ளது. மேலும் அவர் கடந்த ஒரு வாரமாக வேைலக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். சம்பவத்தன்று துரைராஜ் தனது மனைவியிடம் செலவுக்கு பணம் கேட்டார்.

    அப்போது அவரது மனைவி தன்னிடம் பணம் இல்லை என்று அறிவுரை கூறினார். இதனால் அவர் மனவேதனையுடன் இருந்து வந்தார்.சம்பவத்தன்று வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார்.

    இதைகண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.இதுகுறித்து தடாகம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.வால்பாறை தென்சங்கம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (33). எலக்ட்ரீசியன். இவருக்கு குடிப்பழக்கம் உள்ளது. அதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    சம்பவத்தன்று மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் அவரது மனைவி கோபித்து கொண்டு தாய் வீட்டுக்கு சென்றார். இதனால் மனவேதனை அடைந்த அவர் விரக்தி அடைந்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதுகுறித்து வால்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×