search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டிரைவர் ரெயில் மோதி பலி"

    திண்டுக்கல் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற டிரைவர் ரெயில் மோதி பரிதாபமாக பலியானார்

    குள்ளனம்பட்டி :

    திண்டுக்கல் அருகே எருமநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் மூர்த்தி (வயது 48).டிரைவர்.இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.இந்த நிலையில் நேற்று இரவு மதுபோதையில் திண்டுக்கல்-ஈரோடு ரெயில் நிலையத்திற்கு இடையே தண்டவாளத்தை கடக்க முயன்றார்.அப்போது அந்த வழியாக வந்த ரெயிலில் அடிபட்டு உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த திண்டுக்கல் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன், எஸ்.பி தனிப்பிரிவு காவலர் ராஜேஷ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.பின்னர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×