search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜென்னிங்ஸ்"

    காலேயில் நடைபெற்று வந்த முதல் டெஸ்டில் இங்கிலாந்து 211 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பென் போக்ஸ் ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார். #SLvENG
    இலங்கை - இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் காலேயில் கடந்த 6-ந்தேதி தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது. அறிமுக வீரர் பென் போக்ஸின் (107) அபார சதத்தால் இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 342 ரன்கள் குவித்தது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை மொயீன் அலி (4), ஜேக் லீச் (2) ஆகியோரின் சுழற்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 203 ரன்னில் சுருண்டது.

    139 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து, தொடக்க வீரர் ஜென்னிங்ஸின் (146 நாட்அவுட்) அபார சதத்தால் 6 விக்கெட் இழப்பிற்கு 322 ரன்கள் குவித்து 2-வது இன்னிங்சை டிக்ளேர் செய்தது. ஒட்டுமொத்தமாக 461 ரன்கள் முன்னிலைப் பெற்றதால் இலங்கை அணிக்கு 462 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தது இங்கிலாந்து.


    ஜேக் லீச்

    காலே டெஸ்டில் நான்காவது இன்னிங்சில் 462 ரன்கள் என்பது சாத்தியமே அல்ல என்ற போதிலும், சொந்த மண்ணில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இலங்கை களம் இறங்கியது. 2-வது இன்னிங்சிலும் மொயீன் அலி சிறப்பாக பந்து வீச இலங்கை அணி 250 ரன்களில் சரணடைந்தது.


    அப்பீல் கேட்கும் இங்கிலாந்து வீரர்கள்

    இதனால் இங்கிலாந்து 211 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மொயீன் அலி நான்கு விக்கெட்டுக்களும், லீச் 3 விக்கெட்டுக்களும் வீழ்த்தினார்கள். முதல் இன்னிங்சில் சதமும், 2-வது இன்னிங்சில் 37 ரன்கள் சேர்த்த பென் போக்ஸ் ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார்.

    இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து 1-0 என முன்னிலைப் பெற்றுள்ளது. 2-வது டெஸ்ட் கண்டியில் 14-ந்தேதி தொடங்குகிறது.
    2-வது இன்னிங்சில் ஜென்னிங்ஸ் அபாரமாக விளையாடி சதம் அடிக்க இலங்கைக்கு 462 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்துள்ளது இங்கிலாந்து. #SLvENG
    இலங்கை - இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டி காலே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த இங்கிலாந்து அறிமுக வீரர் பென் போக்ஸ் (107) சதத்தால் 342 ரன்கள் குவித்தது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை மொயீன் அலியின் (4) அபார பந்து வீச்சால் 203 ரன்னில் சுருண்டது.

    பின்னர் 139 ரன்கள் முன்னிலையுடன் இங்கிலாந்து 2-வது இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர் பேர்ன்ஸ் 23 ரன்னிலும், மொயீன் அலி, ஜோ ரூட் ஆகியோர் தலா 3 ரன்னிலும் வெளியேறினார்கள்.

    அதன்பின் தொடக்க வீரர் ஜென்னிங்ஸ் உடன் பென் ஸ்டோக்ஸ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. பென் ஸ்டோக்ஸ் 62 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஜென்னிங்ஸ் அபாரமாக விளையாடி சதம் அடித்தார். இங்கிலாந்து 6 விக்கெட் இழப்பிற்கு 322 ரன்கள் எடுத்திருக்கும்போது இங்கிலாந்து 2-வது இன்னிங்சை டிக்ளேர் செய்தது.



    ஜென்னிங்ஸ் 146 ரன்னுடனும், சாம் குர்ரான ரன்ஏதும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர். இலங்கை அணி சார்பில் தில்ருவான் பெரேரா, ஹெராத் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.

    ஒட்டுமொத்தமாக இங்கிலாந்து (139+322) 461 ரன்கள் முன்னிலைப் பெற்றது. இதனால் இலங்கை அணியின் வெற்றிக்கு 462 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது. 462 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் இலங்கை 2-வது இன்னிங்சை தொடங்கியுள்ளது.
    இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளிலேயே அஸ்வின் 4 விக்கெட் கைப்பற்றி இருப்பதை எதிரணி தொடக்க வீரர் ஜென்னிங்ஸ் பாராட்டி உள்ளார். #ENGvIND #1000thTest
    பர்மிங்காம்:

    இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி நேற்று பர்மிங்காமில் தொடங்கியது. டாஸ் ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியில் கேப்டன் ஜோரூப் 80 ரன்னும், பேர்ஸ்டோவ் 70 ரன்னும், ஜென்னிஸ் 42 ரன்னும் எடுத்தனர்.

    நேற்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து 88 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 285 ரன் எடுத்தது. சாம்குர்ரான் 27 ரன்னிலும், ஆன்டர்சன் ரன் எதுவும் எடுக்காமலும் களத்தில் உள்ளனர்.

    நேற்று முகமதுசமி ஓவரில் சாம்குர்ரான் அவுட் ஆக வேண்டியது. அவரது கேட்சை விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் தவறவிட்டார்.

    இந்திய தரப்பில் அஸ்வின் 4 விக்கெட்டும், முகமது சமி 2 விக்கெட்டும், உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

    பொதுவாக வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் இங்கிலாந்து ஆடுகளத்தில் முதல் நாளிலேயே சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் 4 விக்கெட்டை வீழ்த்தி அசத்தி உள்ளார்.

    அஸ்வினை, இங்கிலாந்து தொடக்க வீரர் ஜென்னிங்ஸ் பாராட்டி உள்ளார். அவர் கூறியதாவது:-


    அஸ்வின் மிகவும் சிறந்த பவுலர். அவர் சரியான இடத்தில் பந்தை வீசினார். மேலும் வேகத்திலும் மாறுபாடு இருக்கும். பந்து நன்கு திரும்பும் ஆடுகளத்தில் நிறைய பந்துகள் விக்கெட்டை வீழ்த்தும் வகையில் இருக்கும். அதுபோன்ற பந்தில் அசிஸ்டயர் குக்கை போல்டு ஆக்கினார்.

    காலை வேளையில் இருந்து ஆடுகளத்தில் பேட்டிங் செய்ய சற்று கடினமாக இருந்தது. நாங்கள் 300 ரன்னுக்கு மேல் எடுப்போம் என்று கருதுகிறேன். அப்படி எடுத்துவிட்டால் எங்களது பந்துவீச்சாளர்கள் சரியான திசையில் நெருக்கடி கொடுப்பார்கள்.

    அதேவேளையில் இரு அணிகளும் பேட்டிங் செய்த பிறகுதான் எது நல்ல ஸ்கோர் என்பது தெரியும் என்றார். #ENGvIND #1000thTest #KeatonJennings #Ashwin
    ×