search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சோழத்தரம்"

    சோழத்தரம் அருகே சாலையில் நின்று கொண்டிருந்த விவசாயி மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் பரிதாபமாக இறந்தார்.

    ஸ்ரீமுஷ்ணம்:

    கடலூர் மாவட்டம் சோழத்தரம் அருகே உள்ள பேரூர் பகுதியை சேர்ந்தவர் அருள்நாதன் (வயது62). விவசாயி. சம்பவத்தன்று இவர் தனது வீட்டின் முன்பு உள்ள சாலையில் நின்று கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாரதவிதமாக அருள்நாதன் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அருள்நாதன் பலத்த காயம் அடைந்தார்.

    அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக் காக சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்கமால் அருள்நாதன் பரிதாபமாக இறந்தார்.

    விபத்து குறித்து சோழத் தரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×