search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சேகர்ரெட்டி"

    • நவீன வசதிகளுடன் பக்தர்களுக்கு சிறப்பு வசதிகள் செய்யப்படுகின்றன.
    • திருமலை திருப்பதி கோவில் சார்பில் விரைவில் கட்டிடப் பணிகள் மேற்கொள்ளப்படும்.

    சென்னை:

    திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தமிழ் நாடு மற்றும் புதுச்சேரி உள்ளூர் ஆலோசனைக் குழுத் தலைவர் ஏ.ஜே.சேகர் ரெட்டி மற்றும் 4 நன்கொடையாளர்கள் குழு சார்பில் திருமலை திருப்பதி வெங்கடேஸ்வரா கோவிலின் புனரமைப்பு மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக ரூ.5 கோடி நன்கொடை வழங்கும் விழா தி.நகரில் இன்று நடந்தது.

    இந்த நிகழ்ச்சியில் ஏ.சி. சண்முகம், ஐசரிகணேசன், காயத்ரிதேவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியின் போது சேகர் ரெட்டி கூறியதாவது:-

    தி.நகர் வெங்கட்நாராயணா சாலையில் அமைந்துள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான கோவில் 48 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும் புதுப்பிக்கப்பட உள்ளது.

    இக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    இதையொட்டி இக்கோவிலை மிகப் பிரமாண்டமாக புதுப்பிக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இதற்காக விரைவில் கோவிலில் பாலாலயம் செய்யப்படுகிறது.

    இக்கோவில் ரூ.50 கோடி செலவில் பிரமாண்டமாக கற்கோவில் கட்டிடமாக மாற்றப்பட உள்ளது.

    இதற்காக அருகில் உள்ள நிலங்கள் நன்கொடையாக வாங்கப்பட்டு வருகிறது.இக்கோவிலில் நவீன வசதிகளுடன் பக்தர்களுக்கு சிறப்பு வசதிகள் செய்யப்படுகின்றன.

    பக்தர்களிடமிருந்து நன்கொடை வசூல் செய்யப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக ரூ.5 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது. திருமலை திருப்பதி கோவில் சார்பில் விரைவில் கட்டிடப் பணிகள் மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கடந்த 18-ந்தேதி திடீரென சந்திரமவுலிக்கு மாரடைப்பு ஏற்பட்டது.
    • ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி ஆஸ்பத்திரியில் சந்திரமவுலி அனுமதிக்கப்பட்டார்.

    சென்னை:

    திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தமிழ்நாடு-புதுச்சேரி ஆலோசனைக் குழு தலைவரும், தொழில் அதிபருமான சேகர்ரெட்டி மகளுக்கும், திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரியான தர்மா என்பவரின் மகன் சந்திரமவுலிக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்று இருந்தது.

    அடுத்த மாதம் (ஜனவரி) 26-ந்தேதி இவர்களது திருமணத்தை ஆந்திர முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி நடத்தி வைப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் மணமகன் சந்திரமவுலி தனது திருமண அழைப்பிதழ்களை கொடுத்து வந்தார். கடந்த 18-ந்தேதி திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று சந்திரமவுலி மரணம் அடைந்தார்.

    இது இரு வீட்டார் குடும்பத்தினர் மத்தியிலும் அவர்களது உறவினர்கள் இடையேயும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ×