search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர்"

    • மத்திய பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு படிக்க கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என்று கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார்.
    • நிதியாண்டுக்கான கல்வி உதவித்தொகை விண்ணப்பத்தை மாணவர்கள் பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் உள்ள மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., என்.ஐ.டி. மற்றும் மத்திய பல்கலைகழகங்களில் பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு படிக்கும் தமிழ்நாட்டை சேர்ந்த பிற்படுத்தப்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்படுத்தப்பட்டோா மற்றும் சீர்மரபினர் மாணவ- மாணவிகளின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2½ லட்சத்துக்கு மிகாமல் உள்ள மாணவ- மாணவிகளில் ஒருவருக்கு ஆண்டுக்கு அதிகபட்சம் ரூ.2 லட்சம் வரை கல்வி உதவித்தொகையாக வழங்குவதற்கு அரசால் ஆணையிடப்பட்டுள்ளது.

    மேற்படி கல்வி உதவித்தொகைக்கு 2022-23-ம் கல்வியாண்டில் விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான மாணவர்கள் கீழ்கண்ட முகவரியிலுள்ள இயக்கத்தையோ அல்லது மாவட்ட கலெக்டர் அலுலகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை அணுகியோ அல்லது https://bcmbcma/tn.gov.in/welfschemes.htm#scholarship schemes என்ற இணையதள முகவரியிலிருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    மேலும் மேற்படி நிதியாண்டுக்கான கல்வி உதவித்தொகை விண்ணப்பத்தை மாணவர்கள் பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தில் சமர்ப்பிக்க வேண்டும். கல்வி நிறுவனங்கள் தங்களது சான்றொப்பத்துடன் தகுதியான விண்ணப்பத்தை பரிந்துரை செய்து ஆணையர், பிற்படுத்தப்பட்டோர் நல இயக்கம், எழிலகம் கட்டிடம் 2-வது தளம் இ சேப்பாக்கம், சென்னை- 5 என்ற முகவரிக்கு பூர்த்தி செய்து

    விண்ணப்பங்களை 31.1.2023-க்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

    • விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதா? அல்லது நிராகரிக்கப்பட்டதா? என்ற விவரம் ஆன்லைன் மூலமாகவே தெரிவிக்கப்படும்.
    • தற்காலிக உரிமத்தின் ஆணையினை தீபாவளி பண்டிகைக்கு ஒரு மாதத்தின் முன்பாகவே இ-சேவை மையம் மூலமாகவே பதிவிறக்கம் செய்ய முடியும்.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    தீபாவளி பண்டிகையையொட்டி வெடிபொருள் விதிகள் 2008-ன் கீழ் செங்கல்பட்டு மாவட்டத்தில் தற்காலிகமாக பட்டாசுகள் வாங்கி விற்பனை செய்ய விரும்பும் விற்பனையாளர்கள் மற்றும் வணிகர்கள் தற்காலிக உரிமம் பெற ஆவணங்களுடன் 30.9.2022 வரை இ-சேவை மையங்கள் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

    கடை அமைவிடத்திற்கான சாலை வசதி, கொள்ளளவு, சுற்றுப்புறங்களைக் குறிக்கும் வகையிலான வரைபடம் மற்றும் கட்டிடத்திற்கான புளு பிரிண்ட் வரைபடம். கடை உத்தேசிக்கப்பட்டுள்ள இடம் சொந்த இடமாக இருப்பின் அதற்கான ஆதாரம் காட்டும் ஆவணம். உரிமத்திற்கான கட்டணம் ரூ.500ஐ அரசு கணக்கில் செலுத்தியமைக்கான அசல் சலான். இருப்பிடத்திற்கான ஆதாரம் (ஆதார் அட்டை/ வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை). வரி ரசீது, புகைப்படம் 1 (பாஸ்போர்ட் சைஸ்) இணைக்கப்பட வேண்டும்.

    விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதா? அல்லது நிராகரிக்கப்பட்டதா? என்ற விவரம் ஆன்லைன் மூலமாகவே தெரிவிக்கப்படும். தற்காலிக உரிமத்தின் ஆணையினை தீபாவளி பண்டிகைக்கு ஒரு மாதத்தின் முன்பாகவே இ-சேவை மையம் மூலமாகவே பதிவிறக்கம் செய்ய முடியும். வருகிற 30-ந்தேதிக்கு பின் ஆன்லைனில் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

    மேலும் நிரந்தர பட்டாசு விற்பனை உரிமம் கோருவோர் மற்றும் வருடாந்திர உரிமம் புதுப்பித்தலுக்கு இவ்வழிமுறை பொருந்தாது.

    உரிமம் இன்றி பட்டாசு விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டால் சட்ட பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×