search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செங்கல்பட்டு கொலை"

    செங்கல்பட்டு அருகே தங்கையுடன் சேர்ந்து கணவரை மனைவியே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டை அடுத்த ஆலம்பாக்கம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சிவகுமார் (வயது 47). மறைமலைநகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.

    இவரது மனைவி சந்திரா. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். கடந்த 9-ந் தேதி இரவு வீட்டு மாடியில் இருந்து சிவகுமார் கீழே விழுந்து கிடந்தார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    மது போதையில் அவர் மாடியில் இருந்து கீழே விழுந்ததாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இதற்கிடையே சிவகுமார் சாவில் மர்மம் இருப்பதாக அவரது தாய் செங்கல்பட்டு தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். பிரேத பரிசோதனையில் சிவகுமார் வி‌ஷம் கொடுத்தும், கழுத்தை இறுக்கியும் கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது.

    இதையடுத்து சிவகுமாரின் மனைவி சந்திராவிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது அவரும், அதே பகுதியில் வசிக்கும் தங்கை மாரியம்மாளும் சேர்ந்து சிவகுமாருக்கு மதுவில் வி‌ஷம் கலந்து கொடுத்தும், கழுத்தை நெரித்தும் கொன்றதாக தெரிவித்தார்.

    கொலை குறித்து சந்திரா போலீசில் கூறும்போது, “கணவர் சிவகுமார் அடிக்கடி தங்கை மாரியம்மாளுக்கு செக்ஸ் தொல்லை கொடுத்து வந்தார். இதனை கண்டித்தும் அவர் கேட்கவில்லை. இதனால் குடும்பத்தில் தகராறு ஏற்பட்டது.

    எனவே கணவர் சிவகுமாரை தீர்த்து கட்ட நாங்கள் முடிவு செய்தோம். வழக்கமாக சிவகுமார் வீட்டு மாடியில் மது குடிப்பது வழக்கம். கடந்த 9-ந்தேதி இரவு அவர் வாங்கி வைத்திருந்த மதுவில் வி‌ஷத்தை கலந்து வைத்தோம். இதனை தெரியாமல் அவர் குடித்து மயங்கினார்.

    உடனே நானும், தங்கை மாரியம்மாளும் சேர்ந்து கணவர் சிவகுமாரின் கழுத்தை இறுக்கி கொன்றோம். பின்னர் கொலையை மறைப்பதற்காக வீட்டு மாடியில் இருந்து உடலை கீழே தள்ளிவிட்டோம்.

    அக்கம் பக்கத்தினருக்கு சந்தேகம் ஏற்படாத வகையில் மதுபோதையில் சிவகுமார் கீழே விழுந்து இறந்துவிட்டதாக கூறி நாடகமாடினோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இதையடுத்து சந்திராவையும், மாரியம்மாளையும் போலீசார் கைது செய்தனர். இந்த கொலைக்கு அவர்களுக்கு வேறு யாரேனும் உதவினார்களா? வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ×