search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுருளி அருவியில் குளிக்க அனுமதி"

    • தொடர் மழை காரணமாக சுருளிஅருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
    • தற்போது தண்ணீர் வரத்து சீரடைந்து ள்ளாதால் ஒரு வாரத்திற்கு பிறகு அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்க ப்பட்டு ள்ளது.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் கம்பம் அருகே மேற்குதொடர்ச்சி மலைஅடிவாரத்தில் அமைந்துள்ள சுருளி அருவியில் வருடம் முழு வதும் நீர்வரத்து இருக்கும். இதனால் தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க வருகி ன்றனர்.

    மேலும் அமாவாசை உள்ளிட்ட புனித நாட்களில் முன்னோர்களுக்கு அருவி கரையோரம் தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில் மேகமலை, ஈத்தக்காடு வனப்பகுதியில் பெய்த தொடர் மழை காரணமாக சுருளிஅருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும் அப்பகுதியில் யானைகள் நடமாட்டம் அதிகமாக இருந்ததால் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி குளிப்பதற்கு வனத்து றையினர் தடைவிதித்தனர்.

    இந்நிலையில் தற்போது தண்ணீர் வரத்து சீரடைந்து ள்ளாதால் ஒரு வாரத்திற்கு பிறகு அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்க ப்பட்டு ள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக நீராடி மகிழ்ந்தனர்.

    • இன்று காலை முதல் தண்ணீர் வரத்து சீரானதால் அருவியில் மீண்டும் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
    • சுற்றுலா பயணிகள் அருவியில் நீராடி மகிழ்ந்தனர்.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கன மழை காரணமாக சுருளி அருவியில் கடந்த 2 நாட்களாக நீர் வரத்து அதிகரித்தது.

    இதனால் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் இன்று காலை முதல் தண்ணீர் வரத்து சீரானதால் மீண்டும் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    இதனால் சுற்றுலா பயணிகள் உற்சாகம் அடைந்தனர்.

    • மகாளய அமாவாசையை முன்னிட்டு இன்று அருவியில் குளிக்கவும், தர்ப்பணம் செய்யவும் அனுமதி வழங்கவேண்டும் என வனத்துறையினரிடம் கோரிக்கை விடப்பட்டது.
    • சுருளி அருவி பகுதியில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

    கம்பம்:

    தேனி மாவட்டம் கம்பம் அருகில் உள்ள சுருளி அருவியில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பெய்த கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. மழை நின்ற பிறகும் ஹைவேவிஸ், மேகமலை பகுதியில் உள்ள அணைகளில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டதால் அருவியில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்த வண்ணம் இருந்தது.

    இதனால் சுருளி அருவியில் குளிக்க பக்தர்களுக்கு தடைவிதிக்கப்பட்டிருந்தது. இந்த அருவியில் உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்து வருபவர்களும், சபரிமலைக்கு செல்லும் பக்தர்களும் புனித நீராடி செல்வது வழக்கம்.

    ஆனால் குளிக்க அனுமதி கிடைக்காததால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர். மகாளய அமாவாசையை முன்னிட்டு இன்று அருவியில் குளிக்கவும், தர்ப்பணம் செய்யவும் அனுமதி வழங்கவேண்டும் என வனத்துறையினரிடம் கோரிக்கை விடப்பட்டது. இதனையடுத்து 53 நாட்களுக்குப் பிறகு சுருளி அருவியில் குளிக்க இன்று பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து அதிகாலை முதல் அங்கு வந்த பக்தர்கள் புனித நீராடி தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்த வழிபட்டு சென்றனர். இதனால் சுருளி அருவி பகுதியில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

    ×