என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சீரமைக்கப்படும்"
- வாய்க்கால் மேடு பகுதியில் கீழ்பவானி வாய்க்காலில் இரு கரைகளில் உடைப்பு ஏற்பட்டு ஊரு மற்றும் விளை நிலயங்களில் தண்ணீர் புகுந்தது
- கால் வாயை சீரமைத்து விளைந்த பயிர்களை காப்பாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கூறப்பட்டுள்ளது
ஈரோடு,
பெருந்துறை அருகே வாய்க்கால் மேடு பகுதியில் கீழ்பவானி வாய்க்காலில் இரு கரைகளில் உடைப்பு ஏற்பட்டு ஊரு மற்றும் விளை நிலயங்களில் தண்ணீர் புகுந்தது.
இதனால் 500 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டி ருந்த மஞ்சள், கரும்பு, வாழை ஆகியவை நீரில் மூழ்கின. சேதமடைந்த கால்வாயை அமைச்சர் முத்துசாமி நேரில் பார்வை யிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் அமைச்சர் முத்துசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறி யதாவது:-
தொடர் மழை காரண மாக கால்வாயின் இரு கரையோரங்களிலும் பெரும் உடைப்பு ஏற்பட்டது. இருப்பினும், உடைப்பு ஏற்படுவதற்கு முன்பு அணையில் இருந்து நீர் திறப்பை 2000 முதல் 1000 கன அடியாக நீர்வளத்துறை குறைத்தது.
கரை உடைப்புக்குப் பின், அணை யிலிருந்து நீர்திறப்பு முழு மையாக நிறுத்தப்பட்டது.
10 நாட்களுக்குள் கால் வாயை சீரமைத்து விளைந்த பயிர்களை காப்பாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே 9-ந் தேதி முதல் தண்ணீர் விநி யோகத்தை மேலும் 20 நாட்களுக்கு நீட்டிக்க அரசாங்கம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஏற்கனவே அரசு அனு மதித்துள்ள ரூ.710 கோடி மதிப்பிலான கால்வாயின் நவீனமயமாக்கல் திட்டத்தை எதிர்த்தும், ஆதரவளித்தும் விவசாயிகள் 2 பிரிவுகளாக உள்ளனர்.
இந்த விவகா ரத்தில் ஒருமித்த கருத்தைக் கொண்டு வர கடந்த மாதமும் 2 குழுக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினேன். பேச்சு வார்த்தைகள் தொடரும்.
மேலும், அருகில் உள்ள கிராமங்களில் உடைப்பு ஏற்பட்டு வயல்களுக்குள் கால்வாய் நீர் புகுந்ததால் சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை பரி சீலிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறி னார்.
பேட்டியின் போது கலெக்டர் கிருஷ்ண னுண்ணி, நீர்வளத்துறை, வருவாய் துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்