search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சீட்டுப்பணம்"

    • வங்கிகள், தபால் நிலையங்கள் என பணத்தை சேமிப்பதற்கு பல வழிகள் உள்ளன.
    • இல்லத்தரசிகள் பலரும் தேர்ந்தெடுப்பது சீட்டு பிடிப்பதைதான்.

    வங்கிகள், தபால் நிலையங்கள் என பணத்தை சேமிப்பதற்கு பல வழிகள் இருக்கின்றன. எனினும் காலம் காலமாக சேமிப்பிற்கு இல்லத்தரசிகள் பலரும் தேர்ந்தெடுப்பது அக்கம் பக்கத்தினருடன் சேர்ந்து சீட்டு பிடிப்பதைதான். சேமிக்கும் பணம் கைக்கு எட்டிய தூரத்தில் இருக்கும். சிறிய தொகையை முதலீடாக செலுத்தலாம். அவசரகால தேவைக்கு சுலபமாக பெற்றுக்கொள்ளலாம் ஆகிய காரணங்களால்தான் இந்த முறையில் பணத்தைச் சேமிக்க பெண்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

    இந்த சீட்டு பிடிக்கும் குழுவில் 10 முதல் 20 பெண்கள் வரை உறுப்பினர்களாக இருப்பார்கள். சீட்டு நடத்துபவர் அந்த உறுப்பினர்களில் ஒரு வராகவோ அல்லது தனி நபராகவோ இருப்பார். தனி நபராக இருக்கும் பட்சத்தில் அவருக்கு மாதாமாதம் ஒரு குறிப்பிட்ட தொகை கமிஷனாக வழங்கப்படும். இம்மாதிரியான சீட்டுகள் எத்தனை உறுப்பினர்கள் இருக்கிறார்களோ அத்தனை மாதங்கள் நடத்தப்படும். ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட தொகையை ஒரு உறுப்பினருக்கு வழங்குவார்கள். உதாரணமாக ஆயிரம் ரூபாயை உறுப்பினர்கள் அனைவரும் சீட்டு நடத்துபவரிடம் கொடுப்பதாக வைத்துக்கொள்வோம்.

    இவ்வாறு சேர்த்த பணத்தை அந்த மாதம் யாருக்கு கொடுக்கலாம் என்பதை இரண்டு முறைகளில் தேர்வு செய்வார்கள். ஒன்று, குலுக்கல் முறை. மற்றொன்று ஏலம் முறை

    .குலுக்கல் முறையில், உறுப்பினர்களின் பெயர்களை துண்டுச் சீட்டில் எழுதிப்போட்டு குலுக்கல் மூலம் தேர்ந்தெடுப்பார்கள். இந்த முறை மூலம் அனைவருக்கும் சாமான வாய்ப்பு கிடைக்கும். ஏலம் முறையில் ஒருவர் கேட்கும் தொகையை பொறுத்து, யாருக்கு சீட்டு என்பது நிர்ணயம் செய்யப்படும். இப்படித்தான் சீட்டுப் பிடிக்கும் சேமிப்பு திட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த திட்டத்தில் தனிநபர் நம்பிக்கையின் மூலம் மட்டுமே பணத்தை முதலீடு செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்படும். எனவே, உங்களுக்கு மிகவும் பரீட்சயமான, நம்பிக்கையான நபராக இருந்தால் மட்டுமே இதில் முதலீடு செய்ய வேண்டும்.

    மேலே கூறப்பட்டுள்ள இரண்டு முறைகளில் குலுக்கல் முறையை பின்பற்றுபவர்களிடம் சீட்டுப் போட்டு முதலீடு செய்வது நல்லது.

    ஏலம் முறையில், ஒரே நபர் பலமுறை ஏலம் கேட்கும் வாய்ப்பு அதிகம். இதனால் அவசியத்தேவை இருக்கும் போது உங்களுக்கு பணம் கிடைக்காமல் கூட போகலாம். சொற்பமான செலவுகளுக்காக மட்டுமே சீட்டுப் போடுவது நல்லது. அதிக முதலீடு செய்யும் போது இதில் பணத்தை இழக்கக்கூடிய அபாயமும் உள்ளது. இது நம்பிக்கையின் பெயரில் மட்டுமே நடத்தப்படும் சேமிப்பு திட்டம் என்பதால், இதில் அதிக தொகையை முதலீடு செய்வதை தவிர்ப்பது நல்லது.

    ×