search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சில்லரை"

    • பஸ் டிரைவர் திடீரென அதிவேகமாக பஸ்சை ஓட்டி திடீர் பிரேக் போட்டார்.
    • உத்திரபிரசாந்த் தொடர்ந்து கண்டக்டர் மற்றும் டிரைவரிடம் சில்லரை கொடுக்குமாறு மன்றாடினார்.

    புதுச்சேரி:

    வில்லியனூர் அருகே தமிழக பகுதியான பெரம்பையை அடுத்த நடுப்பாளையம் ஆண்டவர் நகரை சேர்ந்தவர் உத்திரபிரசாந்த் (வயது50). விவசாய கூலி தொழிலாளி.

    சம்பவத்தன்று மதியம் உத்திரபிரசாந்த் பி.எஸ்.பாளையத்தில் விதை நெல் விடும் வேலைக்காக வில்லியனூரில் இருந்து தனியார் பஸ்சில் புறப்பட்டு சென்றார். அப்போது பஸ் கண்டக்டரிடம் ரூ.500 கொடுத்து டிக்கெட் எடுத்தார். ஆனால் மீதி பணத்தை கண்டக்டர் கொடுக்கவில்லை.

    இதனை உத்திரபிரசாந்த் கேட்ட போது பி.எஸ்.பாளையம் சென்றதும் தருவதாக கண்டக்டர் கூறியதாக தெரிகிறது. ஆனால் பி.எஸ்.பாளையம் பஸ் நிறுத்தம் சென்றும் மீதி சில்லரையை கண்டக்டர் தரவில்லை.

    இதனை உத்திரபிரசாந்த் கேட்ட போது தற்போது சில்லரை இல்லை என்று கண்டக்டர் தெரிவித்தார். ஆனால் சில்லரை வாங்காமல் பஸ்சில் இருந்து இறங்க மாட்டேன் என்று உத்திரபிரசாந்த் கூறினார்.

    அப்போது பஸ் டிரைவர் திடீரென அதிவேகமாக பஸ்சை ஓட்டி திடீர் பிரேக் போட்டார். இதனால் உத்திரபிரசாந்த் தடுமாறி கீழே விழ முயன்றார். ஆனாலும் சுதாரித்துக்கொண்டு உத்திரபிரசாந்த் தொடர்ந்து கண்டக்டர் மற்றும் டிரைவரிடம் சில்லரை கொடுக்குமாறு மன்றாடினார்.

    ஆனால் அவர்கள் சில்லரை கொடுக்க மறுத்ததோடு தகாத வார்த்தைகளால் திட்டி உத்திரபிரசாந்த்தை பஸ்சை விட்டு கீழே இறங்காவிட்டால் இங்கேயே கத்தியால் குத்தி கொலை செய்து விடுவோம் என்று அவரது மார்பில் கையை வைத்து தள்ளினர்.

    இதனால் பஸ் படிகட்டில் இருந்து விழுந்ததில் உத்திரபிரசாந்த் தலையில் பலத்த காயமடைந்தார். ஆனால் டிரைவரும், கண்டக்டரும் பஸ்சை நிறுத்தாமல் சென்றுவிட்டனர். இதையடுத்து அங்கிருந்தவர்கள் உத்திரபிரசாந்த்தை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து உத்திரபிரசாந்த்தின் மகன் விஜயராகவன் கொடுத்த புகாரின் பேரில் திருபுவனை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×