என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சிறைபிடித்து போராட்டம்"
- போக்குவரத்து பாதிப்பு
- அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்திய பின் கலைந்து ெசன்றனர்
வேலூர்:
வேலூர் மாவட்டம் பென்னாத்தூரில் இருந்து அமிர்தி செல்லும் சாலை வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த சாலை மிகவும் மோசமாக உள்ளது.
குண்டும் குழியுமாக உள்ளதால் அடிக்கடி விபத்துகள் நடக்கிறது.
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு பென்னாத்தூர் அமிர்தி சாலையை சீரமைக்க கோரியும் புதிய தார் சாலை அமைக்க வலியுறுத்தி நஞ்சு கொண்டாபுரம் பகுதி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதற்குப் பிறகு நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.தொடர்ந்து சாலை மோசமாகவே நீடித்து வருகிறது.
இதில் நிலையில் நேற்று நஞ்சு கொண்டாபுரம் பகுதியில் மீண்டும் விபத்து ஏற்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த நஞ்சுக்கொண்டாபுரம் பகுதி பொதுமக்கள் இன்று காலை வேலூரில் இருந்து அமிர்தி செல்லும் அரசு டவுன் பஸ்சை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவவறிந்த ஊராட்சி மன்ற தலைவர் சீதா தமிழ்ச்செல்வன் துணைத் தலைவர் கன்னியப்பன் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
சாலை சீரமைக்க நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் உறுதி அளித்தனர்.இதனை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்