search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறுமியை கர்ப்பம்"

    • ஆசை வார்த்தை கூறி உல்லாசம்
    • போலீசார் விசாரணை

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் கே.வி. குப்பம் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளியின் மகள் 17 வயது.அதே பகுதியில் வசிக்கும் வாலிபர் ஒருவருடன் சிறுமிக்கும் பழக்கம் இருந்துள்ளது.

    இந்நிலையில் வாலிபர் ஆசை வார்த்தைகள் கூறி சிறுமியுடன் நெருக்கமாக இருந்துள்ளார்.

    இந்நிலையில் வாலிபர் ராணுவத்திற்கு தேர்வு செய்யப்பட்டு தற்போது அசாம் மாநிலத்தில் ராணுவ பயிற்சியில் உள்ளதாக கூறப்படுகிறது.

    வாலிபர் உடன் நெருக்கமாக இருந்ததால் அந்த சிறுமி தற்போது கர்ப்பமாக உள்ளார் சிறுமியின் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் அவரது பெற்றோர்கள் மருத்துவரிடம் அழைத்துச் சென்று காண்பித்த போது மருத்துவர்கள் சிறுமியை பரிசோதனை செய்ததில் சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. சிறுமியிடம் பெற்றோர்கள் விசாரித்த போது வாலிபருடன் நெருக்கமாக இருந்தது தெரியவந்தது

    இதனையடுத்து சிறுமியின் பெற்றோர்கள் குடியாத்தம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி மேற்பார்வையில் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் நிர்மலா ராணுவத்தில் பணிபுரியும் வாலிபர் மீது வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

    ×