search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறுநீரக நோய்"

    ஊத்துக்கோட்டை அருகே சிறுநீரக நோயால் அவதிப்பட்டு வந்த எலக்ட்ரீசியன் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    ஊத்துக்கோட்டை:

    ஊத்துக்கோட்டையை அடுத்த காவனூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (40). எலக்ட்ரீசியன். சிறுநீரக நோயால் அவதிப்பட்டு வந்த முருகன் மருத்துவ செலவு செய்ய முடியாமல் கஷ்டப்பட்டு வந்தார். நோய் வாய்ப்பட்ட கணவரை பார்த்து கொள்ள வேண்டியது இருந்ததால் அவரது மனைவி மஞ்சுளா தான் பார்த்து வந்த வேலையையும் இழந்தார்.

    இதனால் அவரது குடும்பம் வருமானம் இல்லாமல் வறுமையில் வாடியது. இந்த நிலையில் ஊத்துக்கோட்டை அருகே விவசாய கிணறு அருகில் ஒருவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் கிடைத்தது.

    இதற்கிடையில் குடும்பத்தை கவனிக்க முடியாமல் விரக்தி அடைந்த முருகன் வீட்டை விட்டு வெளியேறினார். அவரை தேடிய குடும்பத்தினருக்கு தற்கொலை செய்து கொண்டது முருகன் என தெரியவந்தது. பொன்னலூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×