search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறப்பு தடுப்பூசி முகாம்"

    • குழந்தைகள், கர்்ப்பிணிகளுக்கு சிறப்பு தடுப்பூசி முகாம் நடக்கிறது.
    • மாவட்ட நிர்வாகங்களின் சார்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

    விருதுநகர்

    தமிழகம் முழுவதும் உள்ள 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கர்ப்பிணிகளுக்கும் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடைபெற உள்ளது.

    முதல் கட்டம் ஆகஸ்டு மாதம் 7 முதல் 12 வரையிலும், 2-வது கட்டம் செப்டம்பர் 11 முதல் 16 வரையிலும் மற்றும் 3-ம் கட்டம் அக்டோபர் 9 முதல் 14 வரையிலும் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட உள்ளன.

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தடுப்பூசி முகாம்களை நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் கலெக்டர் ஆஷா அஜீத் தலைமையில் நடந்தது.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் 5 வயதிற் குட்பட்ட குழந்தைகள் 1 லட்சத்து 13 ஆயிரத்து 577 ேபர் உள்ளதாகவும், அதில்1,845 பேருக்கு முறையாக தடுப்பூசி செலுத்தப்படாமல் உள்ளது. அவர்களுக்கு 823 மையங்களில் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளதாக கலெக்டர் கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரி வித்துள்ளார்.

    விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் சிறப்பு தடுப்பூசி முகாம்களுக்கான பல்துறை ஒருங்கி ணைப்புக்குழு கூட்டம் கடந்த வாரத்தில் கலெக்டர் தலைமையில் நடந்தது. வழக்கமாக தடுப்பூசி செலுத்தப்படும் அனைத்து மையங்களிலும் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என கலெக்டர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

    தமிழகம் முழுவதும் உள்ள 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் முறையாக செலுத்தப்பட்டுள்ளதை உறுதி செய்யவும், கர்ப்பிணி கள் மற்றும் 5 வயதுக்குட் பட்ட குழந்தைகளுக்கு விடுபட்ட தடுப்பூசிகளை செலுத்தவும் இந்த முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகங்களின் சார்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

    ×