search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாரணர்"

    • 10 வயதுக்குட்பட்ட 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
    • தாங்களாகவே தங்களின் உடைமைகளை அடுக்கிக்கொள்வது குறித்த பயிற்சிகள் வழங்கப்பட்டன.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் விமானப்ப டைக்கு சொந்தமான கேந்திரிய வித்யாலயா பள்ளியில், சாரண மாணவர்களுக்கான ஆண்டு பயிற்சி முகாம் 2 நாட்கள் நடைபெற்றது.

    இதில், திருச்சி கேவி 1, கேந்திரிய வித்யாலயா கோல்டன் ராக் பள்ளிகளைச் சேர்ந்த 10 வயதுக்குட்பட்ட 50-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    பயிற்சி முகாம் நடைபெற்ற 2 நாட்களும் மாணவர்கள் அங்கேயே தங்கி, தாங்களாகவே தங்களின் வேலைகளை செய்து கொண்டனர்.

    மேலும், குகை வடிவமைத்தல், செடிகளை அலங்கரித்தல், பேச்சு, நடனம், பாடல், ஓவியம், காகிதக் கலை, தாங்களாகவே தங்களின் உடைமைகளை அடுக்கிக் கொள்வது, துணிகளை துவைத்துக் கொள்வது என மாணவர்களுக்கு தேவை யான வாழ்க்கைக் கல்வி பயிற்சிகள் வழங்கப்பட்டன.

    இதற்கான ஏற்பாடுகளை திருச்சி கேந்திரிய வித்யாலயா, கோல்டன் ராக் பள்ளி ஆசிரியர்கள் பத்மா, ஜெய்சங்கர் ஆகியோர் செய்திருந்தனர்.

    ×