search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாக்கடை அகற்றம்"

    • மதுரையில் மீனாட்சிஅம்மன் கோவில் முன்பு தேங்கிய சாக்கடை நீர் அகற்றப்பட்டது.
    • அடிக்கடி கோவில் வாசல் பகுதியில் சாக்கடை கொப்பளித்து துர்நாற்றம் வீசுவதால் பக்தர்கள் மத்தியில் மன உளைச்சல் ஏற்படுள்ளது.

    மதுரை

    உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். இதனால் கோவிலை சுற்றியுள்ள சித்திரை வீதிகளில் எப்போதும் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.

    கோவிலுக்குள் செல்லும் பக்தர்கள் கிழக்கு கோபுர வாசல் பகுதியில் பலத்த சோதனைக்கு பிறகு உள்ளே அனுமதிக்கப்படுவார்கள். இதற்காக அங்கு எந்த நேரமும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருப்பார்கள்.

    இந்த நிலையில் இன்று காலை கிழக்கு கோபுர வாசல் பகுதியில் திடீரென பாதாள சாக்கடை மற்றும் கழிவு நீர் தேங்கியது. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசியது. பக்தர்கள் அந்த வழியாக செல்லவும், கோவிலுக்குள் செல்லவும் மிகுந்த சிரமம் அடைந்தனர்.

    இது தொடர்பாக உடனடி நடவடிக்கை எடுக்க கோரி மாநகராட்சிக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. மாநகராட்சி அதிகாரிகள் அதற்கான வாகனங்களை எடுத்து வந்து கழிவு நீரை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். பல மணி நேரம் நடந்த பணிகளை தொடர்ந்து சாக்கடை அகற்றப்பட்டது.

    ஏற்கனவே சில நாட்க ளுக்கு முன்பும் இதே பகுதியில் பாதாள சாக்கடை கழிவுநீர் தேங்கியது. எனவே கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் பாதாள சாக்கடை மற்றும் மழை நீர் வடிகால் பணிகளை தரமான முறையில் செய்ய வேண்டும் என்றும், கழிவு நீர் கோவில் சுற்றுப்புறங்களில் தேங்காத வகையில் நிரந்தர தீர்வு காணும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்களும், பக்தர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    அடிக்கடி கோவில் வாசல் பகுதியில் சாக்கடை கொப்பளித்து துர்நாற்றம் வீசுவதால் பக்தர்கள் மத்தியில் மன உளைச்சல் ஏற்படுள்ளது.

    ×