என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சமூக ஊடகங்களில் வெளியானஆடியோ"
- பழனி முருகன் கோவிலில் வருகிற ஜனவரி 27-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
- கோவில் அர்ச்சகர்கள் யாரும் ஒத்துழைக்க கூடாது என்பது போல அர்ச்சகர் சங்கதலைவர் பேசும் ஆடியோ வாட்ச்அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூகஊடகங்களில் வெளியாகி உள்ளது.
திண்டுக்கல்:
பழனி முருகன் கோவிலில் வருகிற ஜனவரி 27-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்காக கோவிலில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. பழமையான சிற்பங்கள் புனரமைக்கப்பட்டு புதிய வண்ணங்கள்தீட்டும் பணி நடந்து வருகிறது.
கோவில் உட்பகுதியில் சன்னதி மண்டபங்களில் பக்தர்கள் வசதிக்காக பொருத்தியிருந்த ராட்சத குளிர்சாதன பெட்டிகளுக்கு பதிலாக ரூ.25 லட்சம் மதிப்பில் நவீனகுளிர்சாதன வசதி ஏற்படுத்தப்பட உள்ளது.
இதற்காக கோவில் உட்பகுதியில் மூலவர் சன்னதி பகுதியில் இருந்து பழைய குளிர்சாதன பெட்டிகளை அகற்றும் பணி நடந்து வருகிறது. இதேபோல் பல்வேறு இடங்களிலும் கும்பாபிஷேகத்திற்கு தேவையான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கும்பாபிஷேகம் அவசரகதியில் நடத்தப்படுவதாகவும், இதற்கு கோவில் அர்ச்சகர்கள் யாரும் ஒத்துழைக்க கூடாது என்பது போல அர்ச்சகர் சங்கதலைவர் பேசும் ஆடியோ வாட்ச்அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூகஊடகங்களில் வெளியாகி உள்ளது.
இதுபக்தர்கள் மற்றும் நிர்வாகிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து கோவில் நிர்வாகிகள் தங்களுக்கு தெரியாது என தெரிவித்துவிட்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்