search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சந்தைப்படுத்தல்"

    • கோன் சாம்பிராணியை வீட்டிலேயே தயாரிக்க முடியும்.
    • தயாரித்து வணிக ரீதியாக சந்தைப்படுத்துங்கள்.

    பூஜையில் சுவாமிக்கு சாம்பிராணி போடும் வழக்கம் என்பது தொன்று தொட்டு இருந்து வரும் ஒரு வழக்கம் ஆகும். பாறை போல் இறுகிக் கிடக்கும் சாம்பிராணிக் கட்டிகள், தீயில் பட்டவுடன் புகையாகிப் போகிறது. அதுபோல், நமக்கு வரும் கடினமான துன்பங்கள் எல்லாமே சாம்பிராணி போடப், போட விலகி ஓடும் என்பது ஒரு நம்பிக்கை.

    வீடு மற்றும் தொழில் நிறுவனங்களில் காலை சாம்பிராணி தூபம் போடுவது பலரும் மேற்கொள்ளும் பாரம்பரிய வழக்கமாகும். இதற்கு தேவைப்படும் கோன் சாம்பிராணியை குறைந்த முதலீட்டில் வீட்டிலேயே தயாரிக்க முடியும். இதை எப்படி எளிமையான முறையில் தயாரிக்கலாம் என்று பார்க்கலாம் வாங்க...

    தேவையான பொருட்கள்:

    உலர்ந்த பூக்கள் கப் (ரோஜா. சாமந்தி, மல்லிகை பூக்களின் கலவையாக எடுத்துக் கொள்ளுங்கள்)

    சாமகிரி 1 கப் (வாசனை மூலிகைகளின் கலவை)

    ஏலக்காய் - 10

    கிராம்பு - 10

    பச்சைக் கற்பூரம் - 5 வில்லைகள்

    மஞ்சள் தூள் - 1 டேபிள் ஸ்பூன்

    சந்தனப் பொடி 2 டேபிள் ஸ்பூன்

    வெட்டிவேர் - ஒரு கைப்பிடி

    ரோஜா- ஒரு கப்

    3 டீஸ்பூன்

    ரோஸ் எசன்ஸ்

    பன்னீர் - கப்

    செய்முறை:

    உலர்ந்த பூக்களை மிக்சி ஜாரில் போட்டு நன்றாக பொடித்துக்கொள்ள வேண்டும். பின்னர் அதை சல்லடையில் கொட்டி சலித்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். அதன்பிறகு சாமகிரி, ஏலக்காய், கிராம்பு, பச்சைக் கற்பூரம், மஞ்சள் தூள். சந்தனப் பொடி, வெட்டி வேர் ஆகியவற்றை மிக்சி ஜாரில் போட்டு பொடித்துக்கொள்ளுங்கள்.

    அகன்ற பாத்திரத்தில் இரண்டு பொடிகளையும் சேர்த்து நன்றாகக் கலக்க வேண்டும். பின்பு அதில் நெய் ஊற்றி நன்றாகக் கலக்க வேண்டும்.

    அதன்பிறகு அந்த கலவையில் சிறிது சிறிதாக பன்னீர் சேர்த்து கிளறுங்கள். இந்த கலவை புட்டு மாவு பதத்தில் இருக்க வேண்டும். அதாவது கையில் பிடித்தால் உதிராமல் இருக்க வேண்டும்.

    பின்னர் கோன் மோல்டில் வைத்து இறுக்கமாக சுருட்டி ஒட்டவும். அதன் உள்ளே இந்த கலவையை வைத்து அழுத்தி, வெளியில் எடுத்து வைத்தால் கோன் வடிவத்தில் சாம்பிராணி தயாராகிவிடும். இவற்றை இரண்டு நாட்கள் வெயிலில் காயவைத்து எடுக்க வேண்டும்.

    இந்த சாம்பிராணியை பூஜை அறையில் பயன்படுத்தும்போது, வீட்டில் தெய்வீக மணம் பரவும். முதலில் உங்களுடைய தேவைக்காக தயாரித்து பயன்படுத்திய பிறகு, வணிக ரீதியாக சந்தைப்படுத்துங்கள்.

    • நல்ல மணம் பரப்பும் தீபங்களை ஏற்றி வைக்கலாம்.
    • வீட்டில் நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை.

    பண்டிகைகள் மற்றும் சுப தினங்களில் வீடு, வணிக ரீதியான இடங்கள், கோவில்களில் தீபம் ஏற்றி அலங்கரிப்பதும், வழிபடுவதும் பலரது வழக்கமாகும். குறிப்பாக வீட்டின் நுழைவாயில், பூஜை அறை, வரவேற்பறை போன்ற இடங்களில் நல்ல மணம் பரப்பும் தீபங்களை ஏற்றி வைக்கலாம். இவ்வாறு செய்வதால் வீட்டில் நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை. இத்தகைய தீபங்களை நாமே எளிதாக வீட்டிலேயே தயாரிக்க முடியும்.

    நமது உபயோகத்துக்கு மட்டு மில்லாமல், நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கும் இவற்றை பரிசாக அளித்து மகிழலாம். வாசனை தீபம் தயாரிப்பதற்கு குறைந்த அளவு முதலீடே போதுமானது. அதைப்பற்றிய குறிப்புகள் இதோ.

    தேவையான பொருட்கள்:

    நெய்- 1 லிட்டர்

    சிலிக்கான் அச்சுகள்

    பஞ்சு திரி - 25

    சிறு துண்டுகள்

    கற்பூரம் - 6 வில்லைகள்

    அரோமா எண்ணெய் - 25 மி.லி.

    செய்முறை:

    அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் நெய்யை ஊற்றி உருக்க வேண்டும். பின்னர் கற்பூரத்தை நன்றாகப் பொடித்து நெய்யில் போட்டு கலக்க வேண்டும். இந்த கலவை சற்று ஆறியதும் உங்களுக்கு விருப்பமான அரோமா எண்ணெய்யை அதில் ஊற்றி கலக்க வேண்டும்.

    சிலிக்கான் அச்சுகளின் நடுவில் ஒவ்வொரு திரியாக வைக்க வேண்டும். பின்னர் ஒரு ஸ்பூன் மூலம் நெய்யை அவற்றில் நிரப்ப வேண்டும் (சிலிக்கான அச்சு கிடைக்காத நிலையில் குளிச்சாதனப் பெட்டியில் இருக்கும் ஐஸ் டிரேக்களை பயன்படுத்திக்கொள்ளலாம்). அதன் பிறகு அவற்றை அப்படியே 18 முதல் 30 நிமிடங்கள் வரை ஃபிரிசரில் வைக்கவும். பின்னர் அவற்றை அச்சுகளில் இருந்து வெளியே எடுத்தால் வாசனை பரப்பும் தீபங்கள் தயார் இவற்றை காற்று புகாத உலர்ந்த கண்ணாடி பாட்டில்களில் போட்டு வைக்கலாம். கோடை காலங்களில் இந்த தீபங்களை குளிர்சாதனப்பெட்டியில் வைத்து பாதுகாப்பது நல்லது. தேவைப்படும்போது வாசனை தீபங்களை அகல் விளக்கில் இட்டு ஏற்றலாம்.

    சந்தைப்படுத்தும் முறை:

    பண்டிகை காலங்களில் இதற்கான தேவை அதிகமாக இருக்கும். வாசனை தீபங்களை வீட்டில் மொத்தமாக தயாரித்து அருகில் இருக்கும் சூப்பர் மார்க்கெட்டுகளில் விற்பனை செய்யலாம். கோவில்களின் அருகே இருக்கும் கடைகளிலும் விற்பனைக்கு கொடுக்கலாம். நவராத்திரி, கார்த்திகை தீபம் போன்ற பண்டிகை நேரங்களில் வாசனை தீபங்களை அழகாக பேக் செய்து தாம்பூழத்தில் வைத்து கொடுக்கலாம். முகநூல், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் இவற்றை சந்தைப்படுத்தலாம்.

    • வாரத்தில் மூன்று நாட்களாவது தரையை சுத்தம் செய்ய வேண்டும்.
    • தரையை சுத்தம் செய்யும் வாசனை திரவம் வீட்டிலேயே தயாரிக்க முடியும்.

    நம்முடைய வீட்டையும், சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்திருப்பது நமக்கு ஆரோக்கியத்தை அதிகரிக்கும். சிறு குழந்தைகள் அதிகமாக வீட்டின் தரையில் உட்கார்ந்தும், படுத்தும், உருண்டும் விளையாடுவார்கள். எனவே தரையை சுத்தமாக வைத்திருப்பது அவசியமானது.

    ஒரு வாரத்தில் மூன்று நாட்களாவது தரையை துடைத்து சுத்தம் செய்ய வேண்டும். இதற்கு உபயோகப்படுத்தும் திரவத்தை இல்லத்தரசிகள் வீட்டிலேயே தயாரிக்க முடியும். ஆர்வம் இருப்பவர்கள் இதை சுயதொழிலாகவும் செய்யலாம். தரையை சுத்தம் செய்யும் வாசனை திரவம் தயாரிப்பதற்கு பெரிய அளவு முதலீடோ, அதிக பணியாளர்களோ தேவை இல்லை. இதற்கான மூலப்பொருட்கள் ரசாயனங்கள் விற்பனை செய்யும் கடைகளில் கிடைக்கும்.

    தேவையான பொருட்கள்:

    மினரல் வாட்டர்- 4 லிட்டர்

    பேக்கிங் சோடா - 100 கிராம்

    சிட்ரிக் அமிலம் - 50 கிராம்

    வினிகர் - 250 மி.லி.

    சோடியம் ஹைப்போ குளோரைடு - 500 மிலி,

    சோடியம் லாரில் ஈதர் சல்பேட்- 100 .46.

    லெமன் கிராஸ் அரோமா எண்ணெய்- 25 மிலி

    செய்முறை

    பிளாஸ்டிக் வாளியில் மினரல் வாட்டரை ஊற்றவும். பேக்கிங் சோடாவை சிறிது சிறிதாக அதில் போட்டு நன்றாக கலக்க வேண்டும். பின்னர் அதில் சோடியம் லாரில் ஈதர் சல்பேட் திரவத்தை ஊற்றி கலக்க வேண்டும். இது தண்ணீர் நுரைப்பதற்கும், தரையில் இருக்கும் அழுக்குகளை நீக்குவதற்கும் உதவும். அடுத்ததாக, சிட்ரிக் அமிலத்தை சிறிது சிறிதாக இந்த கரைசலில் ஊற்றி கலக்க வேண்டும். இப்போது கரைசல் நுரைத்து பொங்கத் தொடங்கும். எனவே நிதானமாகவும், கவனமாகவும் கலக்க வேண்டும்.

    நுரை அடங்கியவுடன் வினிகர், சோடியம் ஹைப்போ குளோரைடு, லெமன் கிராஸ் அரோமா எண்ணெய் ஆகியவற்றை ஒவ்வொன்றாக கரைசலில் ஊற்றி நன்றாக கலக்க வேண்டும். இந்த கலவையை நன்றாக முடி 24 மணி நேரத்திற்கு அப்படியே வைக்க வேண்டும். பின்னர் மூடியைத் திறந்து திரவத்தை வடிகட்டி சுத்தமான, ஈரமில்லாத பாட்டில்களில் ஊற்றி வைக்கலாம்.

    தரை துடைக்கும்போது ஒரு வாளி நீருக்கு சில சொட்டுகள் வீதம் இந்த திரவத்தை ஊற்றி கலக்கினால் போதுமானது. தரையை சுத்தம் செய்யும் வாசனை திரவம் தயாரிக்க ஒரு லிட்டருக்கு 20 ரூபாய் வரை செலவாகும். இது குறைந்த செலவில் தரமாக இருப்பதோடு, சுயதொழிலாக மேற்கொண்டால் லாபம் அளிக்கக்கூடியதாகவும் இருக்கும். உங்கள் விருப்பத்திற்கேற்ப வாசனை மற்றும் நிறத்துக்கு பல்வேறு பொருட்களை கலந்து கொள்ளலாம்.

    ×