search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Incense lamp manufacturing"

    • நல்ல மணம் பரப்பும் தீபங்களை ஏற்றி வைக்கலாம்.
    • வீட்டில் நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை.

    பண்டிகைகள் மற்றும் சுப தினங்களில் வீடு, வணிக ரீதியான இடங்கள், கோவில்களில் தீபம் ஏற்றி அலங்கரிப்பதும், வழிபடுவதும் பலரது வழக்கமாகும். குறிப்பாக வீட்டின் நுழைவாயில், பூஜை அறை, வரவேற்பறை போன்ற இடங்களில் நல்ல மணம் பரப்பும் தீபங்களை ஏற்றி வைக்கலாம். இவ்வாறு செய்வதால் வீட்டில் நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை. இத்தகைய தீபங்களை நாமே எளிதாக வீட்டிலேயே தயாரிக்க முடியும்.

    நமது உபயோகத்துக்கு மட்டு மில்லாமல், நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கும் இவற்றை பரிசாக அளித்து மகிழலாம். வாசனை தீபம் தயாரிப்பதற்கு குறைந்த அளவு முதலீடே போதுமானது. அதைப்பற்றிய குறிப்புகள் இதோ.

    தேவையான பொருட்கள்:

    நெய்- 1 லிட்டர்

    சிலிக்கான் அச்சுகள்

    பஞ்சு திரி - 25

    சிறு துண்டுகள்

    கற்பூரம் - 6 வில்லைகள்

    அரோமா எண்ணெய் - 25 மி.லி.

    செய்முறை:

    அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் நெய்யை ஊற்றி உருக்க வேண்டும். பின்னர் கற்பூரத்தை நன்றாகப் பொடித்து நெய்யில் போட்டு கலக்க வேண்டும். இந்த கலவை சற்று ஆறியதும் உங்களுக்கு விருப்பமான அரோமா எண்ணெய்யை அதில் ஊற்றி கலக்க வேண்டும்.

    சிலிக்கான் அச்சுகளின் நடுவில் ஒவ்வொரு திரியாக வைக்க வேண்டும். பின்னர் ஒரு ஸ்பூன் மூலம் நெய்யை அவற்றில் நிரப்ப வேண்டும் (சிலிக்கான அச்சு கிடைக்காத நிலையில் குளிச்சாதனப் பெட்டியில் இருக்கும் ஐஸ் டிரேக்களை பயன்படுத்திக்கொள்ளலாம்). அதன் பிறகு அவற்றை அப்படியே 18 முதல் 30 நிமிடங்கள் வரை ஃபிரிசரில் வைக்கவும். பின்னர் அவற்றை அச்சுகளில் இருந்து வெளியே எடுத்தால் வாசனை பரப்பும் தீபங்கள் தயார் இவற்றை காற்று புகாத உலர்ந்த கண்ணாடி பாட்டில்களில் போட்டு வைக்கலாம். கோடை காலங்களில் இந்த தீபங்களை குளிர்சாதனப்பெட்டியில் வைத்து பாதுகாப்பது நல்லது. தேவைப்படும்போது வாசனை தீபங்களை அகல் விளக்கில் இட்டு ஏற்றலாம்.

    சந்தைப்படுத்தும் முறை:

    பண்டிகை காலங்களில் இதற்கான தேவை அதிகமாக இருக்கும். வாசனை தீபங்களை வீட்டில் மொத்தமாக தயாரித்து அருகில் இருக்கும் சூப்பர் மார்க்கெட்டுகளில் விற்பனை செய்யலாம். கோவில்களின் அருகே இருக்கும் கடைகளிலும் விற்பனைக்கு கொடுக்கலாம். நவராத்திரி, கார்த்திகை தீபம் போன்ற பண்டிகை நேரங்களில் வாசனை தீபங்களை அழகாக பேக் செய்து தாம்பூழத்தில் வைத்து கொடுக்கலாம். முகநூல், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் இவற்றை சந்தைப்படுத்தலாம்.

    ×