search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சதிதிட்டம்"

    • சிறையில் ரவுடியை சந்தித்து பா.ஜ.க. நிர்வாகி சதித்திட்டம் தீட்டியது அம்பலமாகி உள்ளது
    • திரைப்பட இயக்குனர் கொலையில் கைதான பா.ஜ.க. நிர்வாகி பற்றி பரபரப்பு தகவல்கள்

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட அரணாரை அண்ணா தெருவை சேர்ந்தவர் செல்வராஜ் என்கிற அப்துல் ரகுமான் (வயது 40). திரைப்பட இயக்குனரான இவர் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர் ரவுடி பட்டியலிலும் சேர்க்கப்பட்டு இருந்தார். இந்த நிலையில் இவர் கடந்த 5-ந் தேதி மாலை தனது பிறந்த நாள் மற்றும் திருமண விழாவையொட்டி பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலின் மதுபான பாரில் நண்பர்களுடன் மது அருந்தி கொண்டாடினார்.அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத மர்ம ஆசாமிகள் அவரை வெட்டி படுகொலை செய்தனர். இந்த கொலை வழக்கு தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொலையாளிகளை தேடி வந்தனர்.இந்த கொலை வழக்கு தொடர்பாக பெரம்பலூர் பழைய பஸ் நிலையம் அருகே திருவள்ளுவர் நகரை சேர்ந்த ராஜன் மகன் சரவணன் (22) என்பவர் திருச்சி கோர்ட்டில் சரணடைந்தார்.இதையடுத்து இந்த கொலை வழக்கு தொடர்பாக பெரம்பலூர் போலீசார் பெரம்பலூர்-எளம்பலூர் ரோடு மேட்டு தெருவை சேர்ந்த அபினாஷ் (22), திருச்சி மாவட்டம், துறையூர் தாலுகா, வடமலை சந்துவை சேர்ந்த நவீன் (20), நவல்பட்டு பூலாங்குடி காலனி பள்ளிவாசல் தெருவை சேர்ந்த பிரேம் ஆனந்த் (45), அவரது மனைவி ரமணி (34), பெரம்பலூர் அருகே செஞ்சேரி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த நவீன் (19) மற்றும் 17 வயதுடைய சிறுவன் ஆகிய 6 பேரை கைது செய்து விசாரணை நடத்தினர்.பெரம்பலூர் மாவட்டம், அம்மாபாளையத்தை சேர்ந்த பிரபல ரவுடி அழகிரி தரப்புக்கும், கொலையான அப்துல் ரகுமானுக்கும் கட்ட பஞ்சாயத்து செய்வதில் தொழில் போட்டி ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே உள்ள வழக்கில் கைதாகி அழகிரி தற்போது சிறையில் உள்ளதால், அப்துல்ரகுமான் கட்ட பஞ்சாயத்தில் அதிகளவில் ஈடுபட்டதால் அழகிரி தரப்புக்கு வருமானம் பாதிக்கப்பட்டது. இதனால் அழகிரிக்கு பெரம்பலூர் மாவட்டத்தில் செல்வாக்கு குறைந்து வந்ததாம். இதனால் சிறையில் இருக்கும் அழகிரி தனது மனைவி சங்கீதா மூலம் திட்டம் தீட்டி கூட்டாளிகளை வைத்து அப்துல் ரகுமானை கொலை செய்ததாக விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். கைதான ரமணி அழகிரியின் தங்கை ஆவார்.இந்த நிலையில் இந்த கொலை வழக்கில் தலைமறைவாகி இருந்த பெரம்பலூர் திருநகரை சேர்ந்தவரும், பெரம்பலூர் மாவட்ட பா.ஜனதா துணை தலைவருமான ஜெயபாலாஜி (வயது 43) முன் ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் அவரின் மனு தள்ளுபடியானது. இதையடுத்து ஜெயபாலாஜியை போலீசார் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.போலீஸ் விசாரணையில் திரைப்பட இயக்குனர் செல்வராஜ் கொலைக்கு ஜெயபாலாஜி சதி திட்டம் தீட்டியது தொடர்பாக பரபரப்பான தகவல்கள் கிடைத்துள்ளன.பா.ஜ.க. பிரமுகரான ஜெயபாலாஜிக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. சிறையில் உள்ள ரவுடி அழகிரியுடன் அடிக்கடி செல்போனில் தொடர்பு ெ காண்டு பேசிவந்த ஜெயபாலாஜிக்கு சிறைக்கு சென்று சந்தித்து பேசியுள்ளார். இதுவும் விசாரணையில் தெரியவந்தது. இதனை தெடர்ந்தே அவரை கொலை வழக்கில் போலீசார் கைது செய்துள்ளனர்.

    ×