search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொளத்தூர் கொள்ளை"

    கொளத்தூரில் வீட்டின் பூட்டை உடைத்து 30 பவுன் நகையை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இது குறித்து ராஜமங்கலம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
    மாதவரம்:

    கொளத்தூர், ஜெயராமன் நகர் 7-வது தெருவைச் சேர்ந்தவர் தயாளன். சோழிங்கநல்லூரில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

    நேற்று காலை வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தாய் வீட்டுக்கு சென்றார். பின்னர் மாலையில் திரும்பி வந்த போது, வீட்டு பூட்டு உடைந்து கிடந்தது. பீரோவில் இருந்த 30 பவுன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று இருந்தனர். இது குறித்து ராஜமங்கலம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    ×