search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொண்டை ஊசி வளைவு"

    • எதிரே வரும் வாகனங்களுக்கு தகவல் தெரிவிக்கும் வகையில், ஒலி எழுப்ப வேண்டும் என டிரைவர்களுக்கு தகுந்த அறிவுரை கூறினர்.
    • சுற்றுலா வாகன டிரைவர்கள் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுகிறாா்களா? என்பது குறித்து, பிரீத் அனலைசர் கருவி மூலமும் போலீசார் சோதனை செய்து பார்த்தனர்.

    ஊட்டி:

    தென்காசியில் இருந்து கடந்த வாரம் நீலகிரிக்கு வந்த ஒரு சுற்றுலா பஸ் குன்னூா் மலைப்பாதை பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 9 பயணிகள் உயிரிழந்தனர்.

    இந்நிலையில் நீலகிரி மாவட்டத்துக்கு சுற்றுலா வரும் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரபாகரன் உத்தரவிட்டார். இதன்படி குன்னூா் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துகணேஷ், சப்-இன்ஸ்பெக்டர் ரவி, உதவி போக்குவரத்து இன்ஸ்பெக்டர் மணிகண்டன் அடங்கிய குழுவினர், நேற்று அங்கு உள்ள பஸ் நிலையம், ஆம்னி பஸ்-டாக்சி நிறுத்தம் ஆகிய பகுதிகளுக்கு நேரடியாக சென்றனர்.

    அப்போது அவர்கள் மலைப்பாதைக்கு வந்திருந்த சுற்றுலா வாகனங்களை தடுத்து நிறுத்தி, அதிவேகமாக வாகனங்களை இயக்கக்கூடாது, பிரேக் டிரம் சூடாகி இருந்தால் சற்று நேரம் வாகனத்தை நிறுத்தி ஓய்வு எடுத்து செல்லவேண்டும்.

    மலைப்பாதையில் உள்ள கொண்டைஊசி வளைவுகளில் மிகவும் மெதுவாக வாகனங்கள் செல்ல வேண்டும். எதிரே வரும் வாகனங்களுக்கு தகவல் தெரிவிக்கும் வகையில், ஒலி எழுப்ப வேண்டும் என டிரைவர்களுக்கு தகுந்த அறிவுரை கூறினர்.

    மேலும் சுற்றுலா வாகன டிரைவர்கள் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுகிறாா்களா? என்பது குறித்து, பிரீத் அனலைசர் கருவி மூலமும் போலீசார் சோதனை செய்து பார்த்தனர்.

    இதுதவிர மோட்டார் சைக்கிளில் வேகமாக வருபவா்களை தடுத்து நிறுத்தி, மெதுவாக. கவனத்துடன் செல்ல வேண்டும் என அறிவுறுத்தினா். சுற்றுலா வாகனங்களுக்கான விழிப்புணா்வு பணிகள் தொடா்ந்து நடைபெறும் என்று போலீசார் தெரிவித்து உள்ளனர்.

    • சுற்றுலா பயணிகள் வலியுறுத்தல்
    • விபத்து ஏற்படும் அபாயம்

    ஜோலார்பேட்டை:

    சுற்றுலா தளமான ஏலகிரி மலையில் 14 கொண்டை ஊசி வளைவுகளிலும் சோலார் மின்விளக்கு பொருத்த வேண்டும் இரவு நேரங்களில் பயணிக்கும் சுற்றுலா பயணிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட ஏலகிரி மலை தமிழ்நாட்டில் சிறந்த சுற்றுலா தலங்களில் ஊட்டி கொடைக்கானல் ஏற்காடு போன்று ஏலகிரி மலை மிக சிறந்த சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது.

    ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏலகிரி மலைக்கு கேரளா கர்நாடகா ஆந்திரா மாநிலம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயனிகள் வந்து செல்கின்றனர்.

    சுற்றுலா தலமான ஏலகிரி மலையில் இயற்கை பூங்கா, படகு இல்லம், மூலிகைபண்ணை, மலை மலையேற்றம், நிலாவூர் ஸ்ரீ கதவநாச்சி அம்மன் திருக்கோயில், பறவைகள் சரணாலயம், சாகச விளையாட்டுகள், தாமரைக் குளம், உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்கள் ஏலகிரி மலையில் அமைந்துள்ளன. இங்கு வரும் சுற்றுலா பயணிகள் பகலில் வரும் போது 14 கொண்டை ஊசி வளைவுகளில் இயற்கை காட்சிகளையும் ரசித்து செல்கின்றனர்.

    ஆனால் இரவு நேரங்களில் மலைப்பாதை இருள் நிறைந்து காணப்படுவதால் வளைவுப் பகுதிகளை தெரியவில்லை என்றும் மழைக்காலங்களில் அவ்வப்பொழுது பனிமூட்டம் இருந்தால் வளைவு பகுதி தெரியாமல் இருப்பதாகவும் சுற்றுலா பயணிகள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.

    வளைவு பகுதிகளில் மின்விளக்குகளில் இருந்தால் மலைப்பாதைகளில் விபத்துகள் தவிர்க்கலாம் எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் 14 கொண்டை ஊசி வளைவுகளிலும் சோலார் மின்விளக்குகள் பொருத்த வேண்டும் என சுற்றுலா பயணிகளும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • வாகன ஓட்டிகள் வலியுறுத்தல்
    • அவ்வப்போது சறுக்கி விபத்துக்கள் ஏற்படுகின்றன

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலை சுமார் 14 கொண்டை ஊசி வளைவுகளை கொண்டுள்ளது. இந்நிலையில் 9-வது கொண்டை ஊசி வளைவில் 2 மாதங்களுக்கும் முன் மழையின் காரணமாக பாலம் சேதம் அடைந்துள்ளது.

    சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அதனை சீரமைக்கும் போது பாலத்தின் மேல் மணல் மட்டுமே கொட்டியிருந்தது.

    இந்நிலையில் தற்போது மணல் பரவி குண்டும் குழியுமாக காணப்படுகிறது. தற்பொழுது அது பரவி வாகன ஓட்டிகளுக்கும், சுற்றுலா பயணிகளுக்கும், ஆபத்தான சறுக்கும் நிலையில் உள்ளது.

    இங்கு அவ்வப்போது சறுக்கி விபத்துக்கள் ஏற்படுகின்றன. மேலும் இங்கு வளைவான பகுதி என்பதால் வாகன ஓட்டிகள் அச்சத்தோடு பயணிக்கின்றனர். எனவே சமூக ஆர்வலர்களும் சுற்றுலா பயணிகளும் பாலத்தின் மேற்பகுதியில் தார் சாலையை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

    எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து சுற்றுலா பயணிகளும், வாகன ஓட்டிகளுக்கும், விபத்து ஏற்படாத வண்ணம் தார் சாலை உடனடியாக அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×