search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கேங்ஸ் ஆப் மெட்ராஸ்"

    சிவி குமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘கேங்ஸ் ஆப் மெட்ராஸ்’ திரைப்படத்தின் ஒளிப்பதிவு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. #GangsOfMadras
    பீட்சா, சூது கவ்வும் என பல வெற்றி படங்களை தயாரித்த திருக்குமரன் என்டர்டெயிண்மென்ட் நிறுவனம் சார்பில் சிவி குமார் தயாரித்திருந்தார்.

    பிறகு இயக்கத்தின் பக்கம் தலைதிருப்பிய சிவி குமார், தனது முதல் படைப்பாக மாயவன் திரைப்படத்தை இயக்கியிருந்தார். வித்தியாசமான கதையம்சம் கொண்ட இப்படம் அனைத்து தரப்பிடம் இருந்து நல்ல ஒரு வரவேற்பை பெற்றது. தனது இரண்டாவது இயக்கமாக ‘கேங்ஸ் ஆப் மெட்ராஸ்’ என்னும் படத்தினை இயக்கியுள்ளார் சிவி குமார்.



    இப்படத்தின் டீசர் சில தினங்களுக்கு முன் வெளியானது. பலரால் இந்த டீசர் பெரும் பாராட்டுக்குள்ளானது. குறிப்பாக ஒளிப்பதிவு மிகச் சிறப்பாக இருந்ததாகவும் பாராட்டினைப் பெற்றது. இப்படத்திற்கு சிறந்த முறையில் ஒளிப்பதிவு செய்திருந்தவர் இளம் ஒளிப்பதிவாளரான கார்த்திக் கே தில்லை ஆவார்.

    இப்படம் ஏப்ரல் 12 ஆம் தேதி திரைக்கு வரும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    டி.வி. சீரியல்களில் நடித்து வந்த சாய் பிரியங்கா, தற்போது புதிய படத்தில் போதை கடத்தல் ராணியாக நடித்திருக்கிறார். #SaiPriyanka #GangsOFMadras
    சென்னையில் நிகழும் போதை உலக ரகசியங்களை பற்றி ‘கேங்ஸ் ஆப் மெட்ராஸ்’ என்ற படம் தயாராகியுள்ளது. ’ஆசைக்கும் தேவைக்கும் நடுவுல ஒரு சின்ன கோடுதான்’ என தொடங்கும் படத்தின் டீசரை தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். டீசருக்கும் டீசரில் இடம்பெற்ற காட்சிகளுக்காகவும் கார்த்திக் குமார் ஒளிப்பதிவுக்கும் பாராட்டுகள் கிடைத்து வருகின்றன.

    படத்தை இயக்கி தயாரித்து இருக்கும் சிவி.குமாரிடம் கேட்டபோது ‘இது நகரத்தின் இன்னொரு பக்கத்தை காட்டும். இயக்குனர் வேலு பிரபாகரன், டேனியல் பாலாஜி, அசோக், விஷ்வா ஆகியோர் வில்லன்களாக நடிக்க சாய் பிரியங்கா நாயகியாக நடிக்கிறார்.

    ஆடுகளம் நரேன், பி.எல்.தேனப்பன் ஆகியோரும் நடித்துள்ளனர். ராத் கரிஷ் படத்தொகுப்பு செய்ய, ஹரி டபுசியா இசையமைத்து இருக்கிறார். டிவி சீரியல்களில் நடித்து வந்த பிரியங்காவை கதாநாயகியாக்கி இருக்கிறோம். போதை கடத்தல் கும்பலின் தலைவியாக நடித்து இருக்கிறார். கணவனுக்காக கும்பலில் சேரும் அவர் எப்படி திசை மாறுகிறார் என்பதே கதை. வேலு பிரபாகரனின் வில்லத்தனம் புதிதாக இருக்கும். ஹெராயின் என்ற விலை உயர்ந்த போதைப்பொருளை பின்னணியாக கொண்ட கதை. இந்தி படம் பார்த்த உணர்வு கிடைக்கும். தமிழுக்கு மிகவும் வித்தியாசமான படமாக இருக்கும்’ என்றார்.
    'மாயவன்’ படத்தை தொடர்ந்து சிவி குமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘கேங்ஸ் ஆப் மெட்ராஸ்’ படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. #CVKumar
    அட்டக்கத்தி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் தயாரிப்பாளராக காலடி எடுத்து வைத்தவர் தயாரிப்பாளர் சி.வி.குமார். தொடர்ந்து பீட்சா, சூது கவ்வும், தெகிடி, முண்டாசுபட்டி, இன்று நேற்று நாளை, காதலும் கடந்து போகும், இறைவி என படங்களை தயாரித்தார். 

    தயாரிப்பாளரான சி.வி.குமார், ‘மாயவன்’ என்ற படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதில் சந்தீப் கிஷன், லாவண்யா திரிபாதி, ஜாக்கி ஷெராப், டேனியல் பாலாஜி, உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். வித்தியாசமான கதைக்களத்துடன் வெளியான இப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.



    இப்படத்தை அடுத்து ‘கேங்ஸ் ஆப் மெட்ராஸ்’  என்ற படத்தை இயக்கி வருகிறார். தற்போது இப்படத்தின் பர்ஸ்ட் லுக் டீசரை பிப்ரவரி 20ம் தேதி வெளியிட இருப்பதாக அறிவித்திருக்கிறார்.
    அட்டக்கத்தி, பீட்சா, சூது கவ்வும் உள்ளிட்ட பல படங்களை தயாரித்த சி.வி.குமார், ‘மாயவன்’ படத்தை தொடர்ந்து கேங்காக ஒரு படத்தை இயக்க இருக்கிறார். #CVKumar
    அட்டக்கத்தி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் தயாரிப்பாளராக காலடி எடுத்து வைத்தவர் தயாரிப்பாளர் சி.வி.குமார். தொடர்ந்து பீட்சா, சூது கவ்வும், தெகிடி, முண்டாசுபட்டி, இன்று நேற்று நாளை, காதலும் கடந்து போகும், இறைவி என மிக குறுகிய காலத்தில் பல தரமான படங்களை தயாரித்து வெற்றிகரமான தயாரிப்பாளராக வலம் வருகிறார்.

    தயாரிப்பாளரான சி.வி.குமார், ‘மாயவன்’ என்ற படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதில் சந்தீப் கிஷன், லாவண்யா திரிபாதி, ஜாக்கி ஷெராஃப், டேனியல் பாலாஜி, ஜெயப்பிரகாஷ், மைம் கோபி, அக்‌ஷரா கவுடா, கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கின்றனர். 



    திரில்லர் கதையாக உருவான இப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. தற்போது அடுத்த படத்தை இயக்க தயாராகி வருகிறார். இவர் அடுத்ததாக ‘கேங்ஸ் ஆப் மெட்ராஸ்’  என்ற படத்தை இயக்குகிறார். இப்படத்தில் நடிக்கும் நடிகர்கள் பட்டியலை விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க இருக்கிறார்கள்.
    ×