search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குளித்து மகிழ்ந்தனர்"

    • கொடிவேரி அணையில் சுமார் 2 லட்சத்த 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வந்து குளித்து சென்றனர்.
    • இங்கு அடிப்படை வசதிகள் இல்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

    கோபி:

    கோபிசெட்டி பாளையம் அருகே கொடிவேரி தடுப்ப ணை உள்ளது. பவானிசாகர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் கொடிவேரி தடுப்பணையில் கொட்டி செல்கிறது.

    இந்த தடுப்பணையில் கொட்டும் தண்ணீரில் குளிப்பதற்கும், ரசிப்பத ற்கும் ஈரோடு மாவட்ட பொதுமக்கள் மட்டுமின்றி சேலம், நாமக்கல், கோவை, திருப்பூர், கரூர் உள்பட தமிழகம் முழுவதும் இருந்தும் தினமும் ஏராள மான சுற்றுலா பயணிகள் தங்கள் குடும்ப த்துடன் வந்து செல்கிறார்கள்.

    மேலும் கொடிவேரி அணையில் நுழைவு கட்டணமாக ரூ.5 வசூலி க்கப்படுகிறது. இதனால் திருவிழா மற்றும் விடுமுறை நாட்க ளில் வழக்கத்தை விட பொதுமக்களின் கூட்டம் அதிகளவில் காணப்படும்.

    இந்த நிலையில் ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 மாதமாக வெயிலின் தாக்கம் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் மாவட்டத்தில் 100 டிகிரிக்கு மேல் வெயில் வாட்டி வதைத்து வருவதால் பொது மக்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.

    இதனால் கொடிவேரி உள்பட பல்வேறு நீர்நிலைகளுக்கு சென்று குளித்து மகிழ்ந்து வருகிறார்கள்.

    மேலும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டு ள்ளதால் கொடிவேரி தடுப்பணைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

    மேலும் சனிக்கி ழமை, ஞாயிற்றுக்கிழ மைகளில் கொடிவேரிக்கு வழக்கத்தை விட அதிகள வில் பொதுமக்கள் குடும்பம், குடும்பமாக வந்து செல்கின்றனர்.

    தொடர்ந்து மகிழ்ச்சி அடைந்த பொது மக்கள் அங்கு கொட்டும் தண்ணீரில் குடும்பத்துடன் குளித்து மகிழ்ந்தனர்.

    மேலும் கோடை வெயிலின் தாக்க த்தை தணிப்பதற்காக இளைஞர்கள் பலர் கொடி வேரி தடுப்பணைக்கு வந்து குளித்து மகிழ்ந்தனர்.

    இதனால் கொடிவேரியில் எங்கு பார்த்தாலும் மக்களின் கூட்டமாகவே காணப்ப ட்டது. இதனால் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக கொடிவேரியில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.

    இந்த நிலையில் கடந்த 1½ மாதங்களில் மட்டும் கொடிவேரி அணையில் சுமார் 2 லட்சத்த 12 ஆயிரத்துக்கும் மேற்ப ட்டோர் வந்து குளித்து சென்றனர்.

    கடந்த ஏப்ரல் மாதம் 1 லட்சத்து 32 ஆயிரத்து 731 பேர் வந்து சென்றனர். மேலும் இந்த மாதம் (மே) நேற்று வரை சுமார் 80 ஆயிரம் பேர் குளித்து மகிழ்ந்தனர்.

    கடந்த 1½ மாதங்களில் மட்டும் 2 லட்சத்து 12 ஆயிரத்து 731 பேர் வந்திருந்தனர். இதன் மூலம் ரூ. 10 லட்சத்து 63 ஆயிரத்து 655 வசூலானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்த நிலையில் கொடி வேரி அணைக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கி றார்கள். இங்கு அடிப்படை வசதிகள் இல்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

    கொடிவேரி அணை ப்பகுதியில் பராமரிப்பு இன்றி காணப்படுகிறது. மேலும் அந்த பகுதியில் சுகாதார வளாகம் இல்லாத தால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகி றார்கள்.

    மேலும் உடை மாற்றும் அறையும் இங்கு இல்லை. இதனால் தடுப்பணையில் குளிக்கும் பொதுமக்கள் உடை மாற்ற முடியாமல் தவிக்கிறார்கள். மேலும் பெண்கள் கடும் அவதி அடைந்து வருகி றார்கள.

    இதனால் பொது மக்கள் மறைவான பகுதி களிலும், கார் மற்றும் அவர்கள் வந்த வாகன ங்களிலும் உடை மாற்றும் அவல நிலை உள்ளது.

    எனவே மாவட்ட நிர்வாகம் கொடிவேரி அணை பகுதியில் ஆய்வு செய்து சுகாதார வளாகம், ஆண்கள் மற்றும் பெண்கள் உடை மாற்றும் அறைகள் தனித்தனியாக அமைத்து தர வேண்டும்.

    மேலும் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்.

    • கொடிவேரியில் எங்கு பார்த்தாலும் மக்களின் கூட்டமாகவே காணப்பட்டது.
    • இதையொட்டி ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    கோபி:

    கோபிசெட்டி பாளையம் அருகே கொடிவேரி தடுப்ப ணை உள்ளது. பவானிசாகர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் கொடி வேரி தடுப்பணையில் கொட்டி செல்கிறது.

    இந்த தடுப்பணையில் கொட்டும் தண்ணீரில் குளிப்பதற்கும், ரசிப்பத ற்கும் ஈரோடு மாவட்ட பொதுமக்கள் மட்டுமின்றி சேலம், நாமக்கல், கோவை, திருப்பூர், கரூர் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் தங்கள் குடும்ப த்துடன் வந்து செல்கிறார்கள்.

    மேலும் திருவிழா மற்றும் விடுமுறை நாட்க ளில் வழக்கத்தை விட பொதுமக்களின் கூட்டம் அதிகளவில் காணப்படும்.

    இந்த நிலையில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டு உள்ளது.

    மேலும் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை மற்றும் தொழிலாளர் தினம் (மே-1) என தெடர்ந்து 3 நாட்கள் விடுமுறை நாட்கள் வந்ததால் கொடிவேரி தடுப்பணைக்கு வழக்கத்தை விட பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

    கடந்த 3 நாட்களாக கொடிவேரி அணைக்கு தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்த வண்ணம் இருந்தனர்.

    இதே போல் கடந்த சனிக்கிழக்கிழமை பொதுமக்களின் கூட்டம் ஓரளவுக்கு இருந்தது.ஆனால் ஞாயிற்றுக்கிழமை கொடிவேரி தடுப்பணைக்கு ஆயிரக்கணக்காக பொது மக்கள் பலர் தங்கள் குடும்பத்தினருடன் வந்திருந்தனர்

    காலை நேரத்தில் கூட்டம் குறைந்த காணப்பட்டாலும் நேரம் செல்ல செல்ல மக்களின் கூட்டம் அலைமோதியது.

    மேலும் நேற்று மே தினம் என்பதால் பெரும்பாலான கடைகள் மற்றும் நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டது. இதனால் நேற்று கொடிவேரி அணைக்கு ஈரோடு மாவட்ட மக்கள் மட்டுமின்றி தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் ஆயிரக் கணக்கான சுற்றுலா பயணிகள் குடும்பம் குடும்பமாக கார், வேன், இரு சக்கர வாகனங்களில் வந்த வண்ணம் இருந்தனர்.

    தொடர்ந்து மகிழ்ச்சி அடைந்த பொதுமக்கள் சிறுவர்- சிறுமிகள், ஆண்கள், பெண்கள், இளைஞர்கள் என அனைவரும் தடுப்பணையில் கொட்டும் தண்ணீரில் குடும்பத்துடன் குளித்து மகிழ்ந்தனர்.

    இதனால் இன்று கொடிவேரியில் எங்கு பார்த்தாலும் மக்களின் கூட்டமாகவே காணப்பட்டது.

    இதனால் கோபிசெட்டிபாளையம் பஸ் நிலையம், நகரின் முக்கிய பகுதிகள் மற்றும் கொடிவேரி அணைக்கு செல்லும் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    இதனால் வாகனங்கள் அணி வகுத்து சென்றன. இதையொட்டி ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    குடும்பத்துடன் வந்த பொதுமக்கள் தங்கள் கொண்டு வந்த உணவுகளை தடுப்பணை யின் வெளிபகுதியில் அமர்ந்து சாப்பிட்டனர். மேலும் அங்கு விற்பணை செய்யப்படும் மீன்களையும் ருசித்து சாப்பிட்டு சென்றனர்.

    கெடிவேரி அணைக்கு கடந்த 3 நாட்களாக சுமார் 34 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வந்து குளித்து மகிழ்ந்தனர். கடந்த சனிக்கிழமை 7 ஆயிரம் பேரும், ஞாயிற்றுக்கிழமை 12 ஆயிரத்து 500 பேரும்,

    நேற்று திங்கட்கிழமை 14 ஆயிரத்து 500 பேர் என மொத்தம் 34 ஆயிரம் பேர் வந்திருந்தனர். இதன் மூலம் கடந்த 3 நாட்களில் கொடிவேரி அணை மூலம் ரூ1 லட்சத்து 70 ஆயிரம் வசூலானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×