search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குடிமகன்கள் தொல்லை"

    • பஸ்நிலையத்தில் கூச்சலிட்டபடி குடிமகன்கள் ஓடுகிறார்கள்
    • பயணிகள் அச்சம் அடைந்துள்ளனர்

     குனியமுத்தூர்,

    கோவையில் உக்கடம் பஸ்நிலையம் மிகவும் பழமை வாய்ந்த பஸ்நிலையமாகும். பாலக்காடு, மதுரை, ஒட்டன்சத்திரம், பழனி, பொள்ளாச்சி செல்லும் பஸ்களும், ஏராளமான டவுன் பஸ்களும் இந்த பஸ் நிலையத்திலிருந்து புறப்படுகிறது. எனவே ஏராளமான பயணிகள் இந்த பஸ் நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

    தினமும் மாலை 6 மணியிலிருந்து 8 மணி வரை வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பும் பெண்கள் அதிகமாக நிற்பதை இப்பகுதியில் காணலாம். எனவே அந்த சமயம் பெண்களின் கூட்டம் நிரம்பி வழியும்.

    இந்நிலையில் கூட்டத்தோடு கூட்டமாக குடிமகன்களின் ஆக்கிரமிப்புகளும், தொல்லைகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர். கூட்டத்தில் பெண்கள் நிற்பதை கண்டுகொள்ளாமல் புகை பிடிக்கின்றனர் என்றும் ஒருவருக்கு ஒருவர் ஆபாசமாக பேசி கொண்டு நிற்பதாகவும் பயணிகள் குறை கூறி வருகின்றனர்.

    இது பஸ்சுக்காக காத்து நிற்கும் பயணிகளின் முகம் சுளிக்கும் நிலையை ஏற்படுத்துகிறது. திடீரென்று போதை நபர்கள் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை போன்று கூச்சல் போட்டுக்கொண்டு ஓடும்போது பயணிகளின் மனம் பதற வைக்கிறது. இரவு நேரங்களில் மது குடித்து விட்டு ஆங்காங்கே காலி பாட்டில்களையும் வீசிவிட்டு செல்கின்றனர்.

    மேலும் பஸ் நிலையத்திற்குள் இருக்கும் இருக்கைகளிலும் படுத்துக் கொள்கின்றனர். இதனால் பயணிகள் அமர முடியாமல் கால்கடுக்க நிற்க வேண்டிய கட்டாயம் உள்ளது. இதுபற்றி பயணிகள் கூறுகையில், உக்கடம் பஸ் நிலையத்தை ஒட்டி போலீஸ்நிலையம் உள்ளது. போலீசார் அவ்வப்போது, பஸ் நிலையத்திற்குள் ரோந்து வந்தால் போதை நபர்களின் தொல்லையிலிருந்து விடுபடலாம். இவ்வாறு அவர்கள் கூறினர். 

    • குடிமகன்கள் மிரட்டலால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்துள்ளனர்.
    • இரவில் கூடி நின்று தகராறு செய்கிறார்கள்.

     குனியமுத்தூர்,

    கோவையில் காந்திபுரம், டவுன் ஹால், உக்கடம் போன்ற பகுதிகளில் 2 பேர், மூன்று பேராக சேர்ந்து நின்று குடிபோதையில் பேசிக் கொண்டிருக்கின்றனர். நள்ளிரவு சினிமா முடிந்து குடும்பத்துடன் சாலை வழியாக செல்பவர்கள் இவர்களை கடந்து செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படுவதால் மிகவும் அச்சத்துடன் செல்கின்றனர்.

    கடந்த வாரம் இரவு ஒரு மணிக்கு இரவு சினிமா காட்சி முடிந்து சென்ற ஒரு குடும்பத்தினரை, கோவை டவுன்ஹால்சிக்னல் போலீஸ் செக்போஸ்ட் அருகே மூன்று குடிமகன்கள் வழிமறித்து, பிரச்சினை செய்துள்ளனர்.

    இதுபோன்ற சம்பவம் ஆங்காங்கே நடந்து கொண்டுதான் இருக்கிறது. பொதுவாக டாஸ்மாக் கடை இரவு 10 மணிக்கு எல்லாம் மூடி விடுவார் . ஆனால் குடிமகன்கள் 10 மணிக்கு முன்பாக ஸ்டாக் வாங்கி வைத்து விடுகின்றனர். பின்னர் இரவு முழுவதும் குடிபோதையில் சுற்றிக் கொள்வது வழக்கமாகி விட்டது.

    காவல்துறையினர் இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இரவு நேர ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும். தேவையில்லாத நேரத்தில் தேவையில்லாத இடத்தில் நிற்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவையின் அனைத்து பிரதான சாலைகளிலும் போலீசார் நள்ளிரவில் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்பதே பொதுமக்களின் நோக்கமாகும்.

    ×