search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குடிபோதையில் தகராறு"

    • குடிபோதையில் தகராறு செய்த தந்தையை, மகன் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்றார்.
    • வெம்பக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் வெப்பக்கோட்டை அருகே உள்ள கோட்டையூர் கிழக்கு தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி. இவரது மகன் கருப்பசாமி. கிருஷ்ணா சாமிக்கு மதுப்பழக்கம் இருந்தது அடிக்கடி குடித்துவிட்டு வந்து மனைவி மற்றும் மகனுடன் தகராறு செய்து வந்துள்ளார்.

    இந்த நிலையில் நேற்று இரவு குடித்துவிட்டு வந்து மனைவியுடன் கிருஷ்ண சாமி தகராறு செய்தார் அப்போது அங்கு வந்த கருப்பசாமி தந்தையை கண்டித்தார். அப்போது அவர்களுக்குள் வாக்கு வாதம் ஏற்பட்டது. வாக்கு வாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த கருப்பசாமி இருசக்கர வாகனத்திற்காக வாங்கி வைத்திருந்த பெட்ரோலை கிருஷ்ண சாமியின் மீது ஊற்றி தீ வைத்துள்ளார். அங்கி ருந்தவர்கள் கிருஷ்ணசாமியை மீட்டு காயல்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் கிருஷ்ணசாமி இறந்தார்.

    இதுகுறித்து தாயில்பட்டி கிராம நிர்வாக அதிகாரி கணேசனுக்கு தகவல் கிடைத்தது. அவர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். பின்னர் இந்த சம்பவம் குறித்து வெம்பக்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மது போதையில் தகராறு செய்து வந்த தந்தையை மகனே எரித்துக் கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×