search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காளை மாடுகள்"

    பொங்கல் பண்டிகை காரணமாக ஒட்டன்சத்திரம் மாட்டுச் சந்தையில் காளை மாடு ரூ.1½ லட்சத்துக்கு விலை போனது.

    ஒட்டன்சத்திரம்:

    ஒட்டன்சத்திரத்தில் வாரம் தோறும் திங்கட்கிழமை மாட்டுச்சந்தை நடத்தப்பட்டு வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு தமிழகத்திலேயே மிகப் பெரிய மாட்டுச்சந்தையாக ஈரோட்டில் மாடுகளுக்கு கோமாரி நோய் ஏற்பட்டதால் சந்தைக்கு தடை விதிக்கப்பட்டது. இதே போல் தாராபுரம், திருப்பூர், உசிலம்பட்டி, நத்தம் ஆகிய மாட்டுச்சந்தைகளிலும் மாடுகளுக்கு நோய் காரணமாக தடை விதிக்கப்பட்டு இருந்தது.

    இதனால் அனைத்து வியாபாரிகளும் இன்று ஒட்டன்சத்திரம் மாட்டுச்சந்தையில் குவிந்தனர். தென் மாவட்டங்களில் பல சந்தைகள் மூடப்பட்டதாலும், அடுத்த வாரம் பொங்கல் பண்டிகை வருவதாலும் மாட்டுச்சந்தை களை கட்டியது.

    சராசரியாக ஒரு வாரத்துக்கு 2 ஆயிரம் மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்படும். ஆனால் இன்று 5 ஆயிரத்துக்கும் அதிகமான மாடுகள் விற்பனைக்கு வந்தன. இதனை வாங்குவதற்காகவும் பல்வேறு ஊர்களில் இருந்து வியாபாரிகள் வந்திருந்தனர்.

    அதிக பட்சமாக 1 காளை ரூ.1½ லட்சத்துக்கு விலை போனது. நாட்டு மாடு ரூ.40 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரையிலும், கன்றுக்குட்டி ரூ.10 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரையிலும் விற்பனையானது. மாடுகளுக்கு தேவையான கயிறு மற்றும் தீவனங்களின் விற்பனையும் அதிகமாக இருந்தது. இதனால் ஒட்டன்சத்திரம் மாட்டுச்சந்தை இன்று களை கட்டியது. * * * சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட மாடுகள்.

    ×