search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காற்றின் வேகம்"

    • சில தினங்களாக உடுமலையில் பலத்த காற்று வீசுகிறது.
    • மோட்டார் சைக்கிளில் செல்வோர் கவனமாக செல்ல வேண்டும்.

    உடுமலை:

    ஜூன் முதல் செப்டம்பர் வரை தென்மேற்கு பருவமழை காலம். கடந்த மே மாதம் கேரளாவில் பருவமழைகாலம் துவங்கியது. இதனால் கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் சீதோஷ்ண நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

    அவ்வகையில் சில தினங்களாக உடுமலையில் பலத்த காற்று வீசுகிறது. மாலையில் காற்றின் வேகம் அதிகரித்து சுழன்று அடிக்கிறது. இதனால் சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டுனர்கள் திணறுகின்றனர்.

    குறிப்பாக பொள்ளாச்சி வழித்தடத்தில் செல்லும் ஓட்டுனர்கள் சிலர் காற்றின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் ரோட்டோரம் வாகனத்தை நிறுத்தி விடுகின்றனர். மோட்டார் சைக்கிளில் செல்வோர் கவனமாக செல்ல வேண்டும் என்று போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.

    • ஆண்டுதோறும் மீன்குஞ்சுகள் இருப்பு செய்யப்பட்டு வளர்க்கப்படுகிறது.
    • காற்றின் வேகம் குறைந்தால் மீண்டும் மீன் பிடி தொழில் தீவிரமடையும்.

    உடுமலை,

    உடுமலை அமராவதி அணையில் மீன் வளர்ச்சி கழகம் சார்பில் ஆண்டுதோறும் மீன்குஞ்சுகள் இருப்பு செய்யப்பட்டு வளர்க்கப்படுகிறது. குறிப்பாக, கட்லா, ரோகு, மிர்கால், திலேப்பியா ரக மீன்களே அணைகளில்வ ளர்ப்புக்கு தேர்வு செய்யப்படுகின்றன.வழக்கமாக கோடை காலத்தில்அணை நீர்மட்டம் குறைந்து மீன் பிடிபடுவது அதிகரிக்கும். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக கோடை காலத்தில் பெய்த மழை காரணமாக அணை நீர்மட்டம், குறையவில்லை.மேலும் பலத்த காற்று காரணமாக, பரிசல் இயக்க சிரமம் ஏற்படுவதுடன் விரிக்கும் வலை இழுத்து செல்லுதல் உள்ளிட்ட காரணங்களால் மீன்பிடி குறைந்துள்ளது. பருவமழை சீசன் துவங்கும் முன், காற்றின் வேகம் குறைந்தால் மீண்டும் மீன் பிடி தொழில் தீவிரமடையும் என எதிர்பார்க்கின்றனர்.

    ×