search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கலெக்டர் வாழ்த்து"

    • விழுப்புரம் மாவட்டத்தில் 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில், 6 அரசுப்பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.
    • பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் கங்கா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம், சிங்கனூர் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நி லைப்பள்ளியில், 2022-2023 கல்வியாண்டில், 12-ம் வகுப்பு அரசு பொது த்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி அடைந்ததையொட்டி பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு மாவட்டகலெக்டர் பழனி நினைவுப் பரிசு மற்றும் பாராட்டுச்சா ன்றிதழ்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

    விழுப்புரம் மாவட்டத்தில், 2022- 2023 கல்வியாண்டில், 12-ம் வகுப்பு அரசு பொது த்தேர்வில், 6 அரசுப்ப ள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற துடன், அதிகப்படியான அரசு ப்பள்ளி மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை எடுத்து ள்ளனர். அந்த வகையில், சிங்கனூர் அரசு ஆதி திராவிடர் நல மேல்நிலை ப்பள்ளியில், 12-ம் வகுப்பு பயின்ற 38 மாணவ, மாணவிர்ள் அனைவரும் தேர்ச்சி பெற்று 100 சதவீத தேர்ச்சி இலக்கை எட்டியது மிக மகிழ்ச்சியாக உள்ளது. தேர்ச்சி பெற்ற மாணவர்கள், 100 சதவீதம் தேர்ச்சி பெறுவதற்கு உறுதுணையாக இருந்து, சிறப்பாக பணியா ற்றிய தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் என அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அறிவழகன், மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் (பொறுப்பு) ஹரிதாஸ், திண்டிவனம் மாவட்ட கல்வி அலுவலர் சிவ சுப்பிரமணியன், முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் பெருமாள், தலைமையாசிரியர் மணிமேகலை, சிங்கனூர் ஊராட்சி மன்ற தலைவர் சுரேஷ்குமார், ஒன்றிய குழு உறுப்பினர் கன்னியம்மாள், பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் கங்கா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • மாநில அளவிலான நெசவாளர் விருது பெற்றவர்களுக்கு கலெக்டர் வாழ்த்து தெரிவித்தார்.
    • பசும்பொன் முத்துராமலிங்கதேவர் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க உறுப்பினருக்கு முதல்பரிசு வழங்கப்பட்டுள்ளது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சரகத்தில் 85 கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் செயல்படுகின்றன.பரமக்குடியில் 11ஆயிரத்து 257 கைத்தறி நெசவாளர்கள் இயங்கி வருகின்றனர். இந்த பகுதியில் கைத்தறி பருத்தி சேலைகள், செயற்கை பட்டு, காட்டன் சேலைகள் உற்பத்தி செய்யப்பட்டு கோ-ஆப்டெக்ஸ் மற்றும் பிற விற்பனை யாளர்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

    2022-23-ம் ஆண்டில் தமிழ்நாடு அளவில் மாநில நெசவாளர் விருது பரமக்குடி சரகத்தை சேர்ந்த பசும்பொன் முத்துராமலிங்கதேவர் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர் சரவணனுக்கு முதல்பரிசு வழங்கப்பட்டுள்ளது. இவர் ராமாயண போர் காட்சியை தத்ரூபமாக கைத்தறி சேலையில் வடிவமைத்ததற்காக முதல் பரிசாக ரூ.5 லட்சமும், சான்றிதழும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் இருந்து பெற்றுள்ளார்.

    மேலும் கலைமகள் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தை சேர்ந்த உறுப்பினர் நாகராஜன் இயற்கை காட்சியை தத்ரூபமாக கைத்தறி சேலையில் வடிவமைத்ததற்காக 2-ம் பரிசு ரூ.3 லட்சத்தை முதல்வரிடம் இருந்து பெற்றுள்ளார்.

    மேற்கண்ட 2 நெசவாளர்கள் ராமநாதபுரம் மாவட்ட கலெ்டர் ஜானிடாம் வர்கீஸை சந்தித்து முதல்வரிடம் இருந்து பெற்ற பரிசுகளையும், சான்றிதழ்களையும் காண்பித்து வாழ்த்து பெற்றனர். அப்போது பரமக்குடி சரக கைத்தறித்துறை உதவி இயக்குநர் ரகுநாத் உடனிருந்தார்.

    ×