search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கலப்பு"

    • மாவட்ட பஞ்சாயத்து கூட்டத்தில் தீர்மானம்
    • நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடந்தது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட பஞ்சாயத்து கூட்டம் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட பஞ்சாயத்து தலைவர் மெர்லியன்றுதாஸ் தலைமை தாங்கினார். மாவட்ட பஞ்சாயத்து செயலாளர் முருகானந்தம், சுகாதார பணிகள் துணை இயக்குனர் மீனாட்சி உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் துணைத் தலைவர் சிவக்குமார் கவுன்சிலர்கள் பேராசிரியர் நீல பெருமாள், ஜான்சிலின் விஜிலா, அம்புளி, செலின்மேரி, பரமேஸ்வரன், லூயிஸ், ராஜேஷ் பாபு, ஜோபி, ஷர்மிளா ஏஞ்சல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் கவுன்சிலர் கள் கூறுகையில், குமரி மாவட்டத்தில் கால்நடைகளுக்கான மருந்து தட்டுப்பாடு உள்ளது, நாய் தொல்லை அதிகமாக உள்ளது. அதை கட்டுப்படுத்த என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் சி.டி. ஸ்கேன் மற்றும் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் வசதி செய்ய வேண்டும், குளச்சல் அரசு ஆஸ்பத்திரியில் ஆம்புலன்ஸ் வசதி இல்லை, ஏற்கனவே பிரேத பரிசோதனை கூடம் இருந்த நிலையில் தற்போது அது செயல்படவில்லை. டாக்டர்கள் இருப்பதில்லை. நோயாளிகள் சிகிச்சை அளிக்க சென்றால் உடனே ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரிக்கு செல்லுங்கள் என்று அனுப்பும் நிலை உள்ளது என்றனர்.

    அதிகாரிகள் கூறுகையில், கால்நடைகளுக்கான மருந்து தட்டுப்பாடு ஏற்கனவே இருந்து வந்த நிலையில் தற்போது அந்த தட்டுப்பாடு சரியாகிவிட்டது. நாய்களை கட்டுப்படுத்த பஞ்சாயத்து மற்றும் பேரூராட்சி அலுவலகங்களில் இருந்து பிடித்து கொண்டு வந்தால் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    குமரி மாவட்டத்தில் முதல்-அமைச்சரின் இன்னுயிர் காப்போம் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது குமரி மாவட்டத்தில் மருந்து தட்டுப்பாடு இல்லை. குழித்துறை அரசு ஆஸ்பத்திரி மேம்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப் பட்டு வருகிறது. குளச்சல் அரசு ஆஸ்பத்திரியில் ஆம்புலன்ஸ் வசதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். பிரேத பரிசோதனை செய்வதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம் என்றனர்.

    கூட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பயனாளிகள் ஊதியம் காலதாமதம் இன்றி வழங்க வேண்டும், தமிழகத்தில் மக்களை பாதிப்படையை செய்யும் மின் கட்டணம் மற்றும் சொத்து வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும், குமரி மாவட்டத்தில் விவ சாயத்திற்கு பயன் படுத்தப்படும் பாசன கால்வாய்களில் கழிவுநீர் கலப்பதை உடனடியாக தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், நாகர்கோவில், குழித்துறை, கன்னியாகுமரி, இரணியல், ரெயில் நிலையங்களில் பிரீ பெய்டு ஆட்டோ வசதி செய்து கொடுக்க வேண்டும்.

    தமிழகத்தில் விற்பனை செய்யும் அனைத்து மின்சாதன பொருட்களிலும் தமிழ் மொழி இடம் பெற வேண்டும். தமிழகத்தில் விற்பனை செய்யப்படும் அனைத்து கடைகள் வணிக நிறுவனங்களில் வாடிக்கையாளர்களுக்கு தமிழ் மொழியில் ரசீது வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    ×