search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கருவாடு சமையல்"

    • நெத்திலி கருவாடு சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும்.
    • நெத்திலி கருவாடு வைத்து தொக்கு, ஊறுகாய், வறுவல் என வித்தியாசமாக சமைக்கலாம்.

    தேவையான பொருட்கள் :

    நெத்திலி கருவாடு - 100 கிராம்

    தேங்காய் எண்ணெய் - 50 மில்லி

    மிளகாய் தூள் - 1 ஸ்பூன்

    மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்

    கறிவேப்பிலை - சிறிதளவு

    உப்பு - சிறிதளவு

    செய்முறை :

    நெத்திலி கருவாடை வெந்நீரில் 5 நிமிடங்களுக்கு ஊற வையுங்கள். நன்கு ஊறிய பின்னர் அதில் இருக்கும் மண், தேவையற்ற உறுப்புகள், அதன் தலை ஆகியவற்றை நீக்கிவிடுங்கள்.

    அதன்பின் மண் இல்லாமல் சுத்தமாக கழுவங்கள். கழுவிய பிறகு அந்த கருவாட்டில் மிளகாய் தூள், கறிவேப்பிலை, மஞ்சள், உப்பு சேர்த்து நன்றாக பிரட்டி 10 நிமிடங்கள் அப்படியே வைத்து விடுங்கள்.

    கடாயை அடுப்பில்வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பிரட்டி வைத்த கருவாட்டை போட்டு அடுப்பை மிதமான தீயில் வைத்து 5 நிமிடங்கள் கழித்து பிரட்டி கொடுங்கள். இப்படி கருவாடு நன்கு வெந்து மொறு மொறுவென ஆகும் வரை வேக விடுங்கள்.

    கருவாடு ரெடி ஆனதும் சூடான சாதத்தில் சாம்பார் ஊற்றி இந்த நெத்திலி கருவாட்டை வைத்து சாப்பிட்டால் அட்டகாசமாக இருக்கும்.

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • 30 நிமிடத்தில் இந்த ரெசிபியை செய்யலாம்.
    • சூடான சாதத்தில் சேர்த்து சாப்பிட சூப்பராக இருக்கும்.

    தேவையான பொருட்கள்

    நெத்திலி கருவாடு - 100 கிராம்

    தக்காளி - 4 நறுக்கியது

    சின்ன வெங்காயம் - 100 கிராம்

    பூண்டு - 10 பல்

    பச்சை மிளகாய் - 1

    தட்டிய இஞ்சி பூண்டு - 2 தேக்கரண்டி

    மஞ்சள்தூள் - 1/2 தேக்கரண்டி

    மிளகாய் தூள் - 4 தேக்கரண்டி

    கறிவேப்பில்லை - சிறிதளவு

    கடுகு - அரை தேக்கரண்டி

    நல்லெண்ணெய் - 3 மேசைக்கரண்டி

    உப்பு - தேவையான அளவு

    செய்முறை

    * கருவாட்டை இரண்டு மூன்று முறை நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.

    * தக்காளி, வெங்காயம், ப.மிளகாய், பூண்டை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

    * கடாயை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் பூண்டு, சின்ன வெங்காயம், ப.மிளகாய் சேர்த்தது வதக்கவும்.

    * வெங்காயம் பொன்னிறமானதும், இதில் தட்டிய இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும்.

    * இஞ்சி பச்சை வாசனை போனதும், இதில் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.

    * அடுத்து அதில் மஞ்சள் தூள், உப்பு, மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்.

    * மசாலாவில் பச்சை வாசனை போனதும் இதில் கருவாடை போட்டு கிளறவும்.

    * சிறிது தண்ணீர் ஊற்றி மிதமான தீயில் 10 நிமிடம் வேகவிடவும்.

    * கிரேவி திக்கான பதம் வந்ததும் இறுதியாக சிறிது கறிவேப்பில்லை சேர்த்து இறக்கவும்.

    * இப்போது சூப்பரான நெத்திலி கருவாடு தொக்கு ரெடி.

    ×