search icon
என் மலர்tooltip icon

    சமையல்

    நாவூற வைக்கும் நெத்திலி கருவாடு தொக்கு
    X

    நாவூற வைக்கும் நெத்திலி கருவாடு தொக்கு

    • 30 நிமிடத்தில் இந்த ரெசிபியை செய்யலாம்.
    • சூடான சாதத்தில் சேர்த்து சாப்பிட சூப்பராக இருக்கும்.

    தேவையான பொருட்கள்

    நெத்திலி கருவாடு - 100 கிராம்

    தக்காளி - 4 நறுக்கியது

    சின்ன வெங்காயம் - 100 கிராம்

    பூண்டு - 10 பல்

    பச்சை மிளகாய் - 1

    தட்டிய இஞ்சி பூண்டு - 2 தேக்கரண்டி

    மஞ்சள்தூள் - 1/2 தேக்கரண்டி

    மிளகாய் தூள் - 4 தேக்கரண்டி

    கறிவேப்பில்லை - சிறிதளவு

    கடுகு - அரை தேக்கரண்டி

    நல்லெண்ணெய் - 3 மேசைக்கரண்டி

    உப்பு - தேவையான அளவு

    செய்முறை

    * கருவாட்டை இரண்டு மூன்று முறை நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.

    * தக்காளி, வெங்காயம், ப.மிளகாய், பூண்டை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

    * கடாயை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் பூண்டு, சின்ன வெங்காயம், ப.மிளகாய் சேர்த்தது வதக்கவும்.

    * வெங்காயம் பொன்னிறமானதும், இதில் தட்டிய இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும்.

    * இஞ்சி பச்சை வாசனை போனதும், இதில் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.

    * அடுத்து அதில் மஞ்சள் தூள், உப்பு, மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்.

    * மசாலாவில் பச்சை வாசனை போனதும் இதில் கருவாடை போட்டு கிளறவும்.

    * சிறிது தண்ணீர் ஊற்றி மிதமான தீயில் 10 நிமிடம் வேகவிடவும்.

    * கிரேவி திக்கான பதம் வந்ததும் இறுதியாக சிறிது கறிவேப்பில்லை சேர்த்து இறக்கவும்.

    * இப்போது சூப்பரான நெத்திலி கருவாடு தொக்கு ரெடி.

    Next Story
    ×