search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கயத்தாறு கொலை"

    தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே தூக்க மாத்திரை கொடுத்துவிட்டு கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்த மனைவியை கணவர் வெட்டிக்கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    கயத்தாறு:

    தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள மும்மலைப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள் (50). விவசாயி. இவரது மனைவி கனகலட்சுமி. இவர்களுக்கு 3 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.

    பெருமாளுக்கும் அதே ஊரைச் சேர்ந்த தங்கமாரிக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட் டது. தங்கமாரியின் கணவர் அரிகிருஷ்ணன் கேரளாவில் ரெயில்வேயில் ஒப்பந்த தொழிலாளராக பணிபுரிகிறார். ஒரு மகன், 2 மகள் உள்ளனர்.

    தங்கமாரி தனியாக இருந்ததால் கள்ளக்காதலனுடன் அடிக்கடி உல்லாசமாக இருந்தார். இவர்களது கள்ளக்காதல் விவகாரம் அக்கம்பக்கத்தில் தெரிய வந்தது. இருவரது உறவினர்களும் கண்டித்தனர். எனினும் தங்கமாரியும், பெருமாளும் கள்ளத்தொடர்பை கைவிடவில்லை.

    இந்த நிலையில் கேரளாவில் மழை வெள்ளம் ஏற்பட்டதால் அங்கிருந்து அரிகிருஷ்ணன் சொந்த ஊருக்கு வந்திருந்தார். நேற்று இரவு அரிகிருஷ்ணன் தூங்க சென்றார். அப்போது தங்கமாரி அரிகிருஷ்ணனுக்கு தூக்க மாத்திரை கொடுத்தார்.

    மனைவி திடீரென தூக்க மாத்திரை கொடுத்ததால் சந்தேகம் ஏற்பட்டது. அதை காட்டிக்கொள்ளாமல் அரிகிருஷ்ணன் மாத்திரையை சாப்பிட்டது போல் நடித்து தூர வீசிவிட்டார். பின்பு வீட்டினுள் படுத்து தூங்குவது போல் நடித்தார்.

    நள்ளிரவு நேரத்தில் பெருமாள் தங்கமாரிக்கு செல்போனில் பேசினார். ஊருக்கு வெளியே உள்ள பருத்திக்காட்டுக்கு வருமாரு அழைத்த உடனே தங்கமாரி கணவர் தூங்கி விட்டாரா என்று பார்த்தார்.

    அரிகிருஷ்ணன் தூங்குவது போல் நடித்ததை உண்மை என நம்பி வீட்டு கதவை சாத்திவிட்டு பெருமாளை பார்க்க சென்றார். இதைக்கண்ட அரிகிருஷ்ணன் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்றார். தன்னை ஏமாற்றிவிட்டு கள்ளக்காதலனை தேடிச்சென்ற மனைவியையும், கள்ளக்காதலனையும் கொலை செய்ய திட்டமிட்டார்.

    இதையடுத்து வீட்டில் இருந்த அரிவாளை எடுத்துக்கொண்டு மனைவிக்கு தெரியாமல் வேறு பாதையில் அவரை பின்தொடர்ந்தார். அங்கு பருத்திக்காட்டில் பெருமாளும், தங்கமாரியும் தனிமையில் உல்லாசமாக இருந்தனர்.

    அரிகிருஷ்ணன்

    இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அரிகிருஷ்ணன் அரிவாளால் பெருமாளை சரமாரியாக வெட்டினார். இதில் அவர் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் இறந்தார்.

    இதை பார்த்த தங்கமாரி அங்கிருந்து தப்பி ஓடினார். ஆனால் அவரை விடாமல் துரத்திச்சென்று அரிகிருஷ்ணன் அவரையும் சரமாரியாக வெட்டினார். இதில் தங்கமாரியும் சம்பவ இடத்திலேயே பலியானார். இதையடுத்து அரிவாளை அப்பகுதியில் வீசிய அரிகிருஷ்ணன் கடம்பூர் போலீஸ் நிலையத்துக்கு சென்று சரண் அடைந்தார்.

    இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். பின்பு சம்பவ இடத்துக்கு சென்று வெட்டிக்கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்த பெருமாள், தங்கமாரி ஆகிய 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

    கள்ளக்காதலனுடன் தனது மனைவி உல்லாசமாக இருப்பதை நேரில் பார்த்ததால் ஆத்திரத்தில் இருவரையும் வெட்டிக்கொன்றதாக அரிகிருஷ்ணன் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். #Tamilnews
    ×