search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்"

    தேசிங் பெரியசாமி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிக்கும் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தில் ஸ்டைலிஷ் இயக்குனர் நடிக்க இருக்கிறார். #DulquerSalmaan #HappyPongal2019
    துல்கர் சல்மான் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’. தேசிங் பெரியசாமி இப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் ஸ்டைலிஷான படங்களை கொடுத்து வரும் இயக்குனர் கௌதம் மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.

    இதுகுறித்து இயக்குனர் தேசிங் பெரியசாமி கூறும்போது, ‘கௌதம், எங்கள் படத்தில் ஒரு உற்சாகமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அந்த கதாபாத்திரத்தில் நடிக்க அவர் தான் பொருத்தமாக இருப்பார் என நினைத்து, ஒரு வருடத்திற்கும் மேலாக அவருக்கு மெசேஜ் அனுப்பி, அவரை நடிக்க கேட்டு வந்தேன். ஒரு கட்டத்தில் நான் நம்பிக்கை இழந்தபோது, அவர் பொதுவாக அவரை சந்திக்க அழைத்தார். நாங்கள் கதையைத் தவிர்த்து வாழ்க்கையைப் பற்றி நிறைய பேசினோம். ஆனால் கடைசியாக, அவர் திரைப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். அந்தக் கட்டத்தில் கனவு மெய்ப்பட ஆரம்பமானது, இப்போது ரசிகர்களை மகிழ்விக்க தயாராக உள்ளது" என்றார்.



    கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் நடிகர் துல்கர் சல்மான் மற்றும் நடிகை ரிது வர்மா ஜோடியாக நடிக்கிறார்கள். இப்படத்தின் மூலம் நிரஞ்சனி அகத்தியன் நடிகையாக அறிமுகமாகிறார். ரக்‌ஷன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். #DulquerSalman #HappyPongal2019
    தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி வரும் `கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்தில் கவுதம் மேனன் முக்கிய தோற்றத்தில் நடிக்கிறார். #KKK #DulquerSalmaan
    மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் துல்கர் சல்மான், தமிழில் `கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்தில் நடித்து வருகிறார். தேசிங்கு பெரியசாமி இயக்கும் இந்த படத்தில் துல்கர் ஜோடியாக ரிது வர்மா நடிக்கும் நிலையில், படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஸ்டைலிஷ் இயக்குநர் கவுதம் மேனன் ஒப்பந்தமாகி இருக்கிறார்.

    சென்னையில் நடந்து வரும் படப்பிடிப்பில் துல்கர் சல்மான் - கவுதம் மேனன் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கி வருகிறார்கள். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் தொலைக்காட்சி பிரபலம் ரக்‌ஷன் மற்றும் நிரஞ்சனி அகத்தியன் நடிக்கின்றனர்.



    துல்கர் சல்மானின் 25-வது படமாக உருவாகும் இந்த படத்திற்கு மசாலா காஃபி என்ற மியூசிக் பேண்ட் குழுவினர் இசையமைக்கின்றனர். எஃப்.டி.எஸ் பிலிம்ஸ் சார்பில் அண்டோ ஜோசப் இந்த படத்தை தயாரிக்கிறார்கள். #KKK #DulquerSalmaan

    தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி வரும் `கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. #KKK #DulquerSalmaan
    மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் துல்கர் சல்மான், தற்போது தமிழில் `கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்தில் நடித்து வருகிறார். தேசிங்கு பெரியசாமி இயக்கும் இந்த படத்தில் துல்கர் ஜோடியாக ரிது வர்மா நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரங்களில் தொலைக்காட்சி பிரபலம் ரக்‌ஷன் மற்றும் நிரஞ்சனி அகத்தியன் நடிக்கின்றனர். 

    துல்கர் சல்மானின் 25-வது படமாக உருவாகும் இந்த படத்திற்கு மசாலா காஃபி என்ற மியூசிக் பேண்ட் குழுவினர் இசையமைப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. விஜய் குமார் இயக்கத்தில் வெளியான உறிபடி படத்திலும் மசாலா காஃபி குழுவினர் உருவாக்கிய 3 பாடல்கள் இடம்பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் சோலோ படத்திலும் வேர்ல்டு ஆஃப் சிவா என்ற பாடலை இந்த குழு தான் உருவாக்கியிருந்தது. 

    இந்த நிலையில், கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்திற்கு பாடல் மற்றும் பின்னணி இசையமைக்க மசாலா காஃபி குழுவினர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். வருண் சுனில் ஆரம்பித்த மசாலா காஃபி குழுவில் சூரஜ் சந்தோஷ், பிரீத் பி.எஸ், டேவிட் கிரிம்சன், பாலி, ஜோ ஜான்சன், கிருஷ்ண ராஜ் மற்றும் தயா சங்கர் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

    எஃப்.டி.எஸ் பிலிம்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறது. #KKK #DulquerSalmaan

    ×